விளக்கொளியில் ஜொலித்த மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை குள கார்த்திகை பெருவிழா …

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

லகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா நவ 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மதுரை மீனாட்சியம்மன் கோயிவில்
மதுரை மீனாட்சியம்மன் கோயிவில்

இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில் பொற்றாமரை குளம் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெற்றது. இதனை கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் மற்றும் கோயில் பணியாளர்கள் பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பொற்றாமரைக்குளம், அம்மன் , சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல்விளக்குகள் மூலம் லட்சதீபங்களை ஏற்றினர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பொற்றாமரை குளம்
பொற்றாமரை குளம்

இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.  தொடர்ந்து உபய தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேங்கள் எதுவும் நடைபெறாது என திருக்கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.