திருச்சி – காங்கிரஸ் கட்சி கூட்டதிற்கு அருகே கிடந்த மர்ம பேக்… வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை.!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

காங்கிரஸ் கட்சி கூட்டதிற்கு அருகே கிடந்த மர்ம பேக்… வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை.!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியாவை காக்கும் இராணுவத்துக்கு சல்யூட் என்கிற பேரணியுடனான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை, கரூர் எம்.பி ஜோதிமணி, முன்னாள் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்த நிலையில் பொதுக்கூட்டமானது 6 மணி அளவில் தொடங்கிய நிலையில், பொதுக்கூட்டம் நடைபெரும் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே நுழைவாயில் முன்னே உள்ள டீ கடை அருகே மர்மமான முறையில் புதிதாக வாங்கிய கருப்பு நிற பேக் இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு படை பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதன்மூலம் பேக்கினை ரயில்வே வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் சோதனை செய்தததில், அதில் புடவை, சவுரி முடி போன்றவை இருந்து கண்டெக்கப்பட்டது. பின்னர் அந்த அவ்விடத்தில் வைத்து சென்றது யார் என்கிற விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

திருச்சியில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு அருகே மர்மமான முறையில் பேக் கிடந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– ஜெ. கே..

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.