தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்த கருத்துக்களின் தொகுப்பு
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைவர் அவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடு குறித்த பகிரப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு:
1. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விளக்கம்:
* பெண்கள் மற்றும் குழந்தைகளை நோக்கி நடைபெறும் குற்றங்கள், குறிப்பாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக சமூகத்தில் பரப்பப்படும் கருத்துகள் உண்மையில் எவ்வளவு நம்பகமானவை என்பதற்கு பதிலளிக்கும்போது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளை மேற்கோளாகக் கொள்கிறார்.
* அதன் அடிப்படையில், தேசிய சராசரி குற்ற விகிதமான 66-இன் எதிர்பார்ப்பில், தமிழ்நாட்டில் அந்த விகிதம் 22 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இது, மாநிலத்தில் குற்றம் குறைவாகவே நடைபெறுகிறது என்பதற்கான உறுதியான அடையாளமாக விளங்குகிறது.
2. தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் அதிகரிப்பதாக குறித்த குற்றச்சாட்டிற்கு விளக்கம்:
* கொலைகள் அதிகரித்துள்ளதாக பரவுகின்ற கருத்துக்கு எதிராக, புள்ளிவிவரங்கள் குறிப்பாக, பழிவாங்கல், சாதி மற்றும் வகுப்புவாத நோக்கங்கள், ரவுடித்தனம் போன்ற முன்கூட்டியே திட்டமிடப்பட்ட காரணங்களால் நிகழும் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன.
* 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இவ்வகை கொலை குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொலைகள், 2024இன் அதே காலத்துடன் ஒப்பிடுகையில் குறைவாக பதிவாகியுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் குறிப்பாக 2020-ஆம் ஆண்டு கணிசமான ரவுடிகள் தண்டனை பெற்றுள்ளனர்.

3. காவல்துறையின் மந்தமான எதிர்வினை மற்றும் குற்றவாளிகளின் பயமின்மை குறித்த விமர்சனங்களுக்கு பதிலாக:
* தமிழ்நாடு காவல்துறை சட்டம் மற்றும் நீதித்துறை முறைமைகளை கடைப்பிடிப்பதில் உறுதியுடன் செயல்படுகிறது. எந்தவொரு நேர்மறைதான் அல்லாத (Extra-judicial) நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதையோ, ஆதரிப்பதையோ காவல்துறை மேற்கொள்வதில்லை.
* சட்டத்தின் எல்லைகளுக்குள் செயல்பட்டு குற்றங்களைத் தடுக்க காவல்துறை உறுதியாக செயல்படுவதற்கான ஆதாரமாக, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரவுடிகளுக்கான தண்டனை விகிதங்கள் 2024 ல் உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 150 ரவுடிகள் 10 ஆண்டுக்கும் மேற்பட்ட சிறைத்தண்டனையை பெற்றுள்ளனர்.
* ரவுடித்தனத்துடன் மேற்கொண்ட கொலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இது மேற்கொண்ட கருத்துக்கு ஆதாரங்களை புள்ளிவிவரத்துடன் நிரூபிக்கிறது.
* மேலும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை சிறப்பாக செயல்படுவதன் அடையாளமாக, மாநிலத்தின் முதலீட்டு ஈர்ப்பு மற்றும் 9.6% பொருளாதார வளர்ச்சி விகிதமும் எதிரொலிக்கிறது.
4. என்கவுண்டர்கள் மற்றும் காவல் நிலையங்களில் உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் விளக்கம்:
* காவல்துறையினர், குறிப்பாக குற்றவாளிகளை நேரடியாக எதிர்கொள்ளும் சூழ்நிலையில், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, வேறு வழியின்றி துப்பாக்கியை பயன்படுத்தலாம்.
* கடந்த மூன்று ஆண்டுகளில் காவல்துறையினர் அவ்வாறு பயன்படுத்திய சம்பவங்களில், காயம் ஏற்படுத்தியவற்றின் எண்ணிக்கை, உயிரிழப்புகள் ஏற்படுத்தியதைவிட இருமடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் காவல்துறையின் நோக்கம் தற்காத்து கொளவதே தவிர கொல்வதல்ல. உயிழப்புக்கு காரணமான காவல்துறையின் ஒவ்வொரு நடவடிக்கையும் நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது.
* இத்தகைய நடவடிக்கைகளில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காவல்துறையின் செயல் நியாயமானதாகக் கருதப்படுகிறது. சட்டத்தின் வழி செயல்படுவதை உறுதி செய்யப்படுகின்றது. மேலும், ஆகஸ்ட் 2022 முதல் தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் எதுவும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5. தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் குறித்த காவல்துறை தலைமை இயக்குநரின் விளக்கம்:
* தமிழ்நாடு, இந்திய அளவில் மிகவும் குறைந்த போதைப்பொருள் பயன்பாட்டு விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். “இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாட்டின் அளவு” எனும் தேசிய கணக்கெடுப்பின்படி, Cannabis பயன்பாடு மாநிலத்தில் வெறும் 0.1% ஆகவே உள்ளது, இது நாட்டின் 35வது இடமாகும்.
* இருப்பினும் இம்மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருள் குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன. அதுமட்டுமல்லாமல், NDPS சட்டத்தின் கீழ், 80% க்கும் அதிகமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
* பெரும்பாலான கஞ்சா கடத்தல் இலங்கை நோக்கி நடைபெறுவதாகத் உள்ளது. இதனைத் தடுக்க, மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு பல் முனைப்புடன் தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டு வருகின்றது. தமிழநாடு, போதைப் பொருள் பயிரிடவோ, உற்பத்தி செய்யவோ இல்லாத போதும், இலங்கைக்கு கடத்துவதற்கான ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக திகழ்கிறது. இதனைத் தடுக்கும் முயற்சியாக, குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன;நிதி வழிகளில் விசாரணை நடத்தப்படுகிறது மற்றும் பிற மாநிலங்களோடு மற்றும் மத்திய அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
6. தமிழ்நாட்டில் சைபர் குற்றங்கள் எதிர்கொள்வது குறித்து தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கைகள்:
* சைபர் குற்றங்கள், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஒரு சவாலாக உள்ளது. இதனை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு காவல்துறை தொழில்நுட்ப வழித் தலையீடுகள், பொதுக்கல்வி மற்றும் தேசிய அமைப்புகளுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்கிறது.
* முக்கிய சவாலாக, சைபர் குற்றவாளிகள் பணத்தை மிகவும் வேகமாக பல கணக்குகளை பயன்படுத்தி பிரித்து அனுப்பி வைப்பதால் மீட்பு கடினமாகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சம்பவத்தில் ₹1.7 கோடி ரூபாய் ஒரு மணி நேரத்திற்குள் 100 கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இதுபோன்ற பரிவர்த்தனைகளில் பணத்தை மீட்பது சிக்கலான விஷயமாகும்.இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக, இந்திய அரசின் I4C அமைப்புடன் தமிழ்நாடு காவல்துறை இணைந்து செயல்படுகிறது. மோசடி செய்யப்பட்ட நிதிகளை வங்கியில் விரைவாக முடக்கும் வகையில் தேசிய 1930 ஹெல்ப்லைன் மற்றும் வங்கிகளுடன் API அடிப்படையிலான ஆட்டோமேஷன்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
* சைபர் குற்றங்களை கையாளும் உள்கட்டமைப்பாக, தமிழ்நாட்டில் பிரத்தியேக சைபர் குற்றப்பிரிவு செயல்படுகிறது. 1930 உதவி எண் 24/7 செயல்படும்விதமாக, 50 இருக்கைகளுடன் மூன்று ஷிப்டுகளில் சுழற்சிமுறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சைபர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
* பெரும்பாலான சைபர் மோசடிகள் OTP, வங்கி விவரங்களைப் பகிர்வதால் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தனிப்பட்ட தகவல்களை பகிரவேண்டாம் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. சைபர் குற்றத்தை பொறுத்தவரை தமிழக காவல்துறையின் நோக்கம் மீட்டெடுப்பதுதான்.
7. பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளுக்கெதிரான தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கைகள்:
* தமிழ்நாட்டில் பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) மீது நடைபெறும் வன்கொடுமைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. தேசிய தரவுகளின்படி atrocity-prone areas என வகைப்படுத்தப்பட்ட இடங்கள், 2021-இல் 445 என இருந்த நிலையில், தற்போது 362 ஆக கணிசமாக குறைந்துள்ளது. இத்தகைய வன்கொடுமை குற்றங்களில் நீதி வழங்கும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் SC/ST வழக்குகளுக்காக சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், பாதிக்கப்பட்டோருக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வுகள் வழங்கப்படுகின்றன.
* மேலும், தலைமைச் செயலாளரால் நடத்தப்படும் மாதாந்திர ஆய்வுகள் மூலமும், மாவட்டங்களில் செயல்படும் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மூலமும் இவ்வகை வழக்குகள் கண்காணிக்கப்படுகின்றன.

8.இணையவழி புகார்கள் தொடர்பான பொதுமக்கள் குறைகள் குறித்து.
* ஒவ்வொரு காவல் நிலையத்திலும், SCRB குறைதீர்ப்பு பதிவு அமைப்பின் கீழ், வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் புகார்தாரர்களின் புகார்களை பதிவு செய்வது மட்டுமின்றி அவர்களுக்கு ரசீதையும் வழங்கி, மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்கிறார்கள்.
* மேலும், பொதுமக்கள் முதல்வரின் முகவரி இணையதளம் மூலம் தங்கள் புகார்களை நேரடியாக பதிவு செய்யலாம். இதுவரை, 6 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் இவ்விதமாக பெறப்பட்டுள்ளன. இந்த புகார்களில், 50% பேரின் கருத்துக்கள் மாதிரி எடுக்கப்பட்டுள்ளன. இது பொதுவாக உள்ள 5-6% மாதிரி விகிதத்தைவிட மிகவும் உயர்ந்தது. இதனூடாக 99% விகிதத்தில் திருப்தி அடைந்ததாக பதில்கள் கிடைத்துள்ளன. இதனால் பெரும்பாலான புகார்கள் திறம்பட தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழ்நாடு அரசு பூஜ்ஜிய (Zero) FIR கொள்கையை ஏற்றுக்கொண்டு, எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும், அதிகார வரம்பைக் காரணமாக வைத்து தட்டிக்கழிக்காமல் FIR பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, பிற மாநிலங்களிலிருந்தும் அனுப்பப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பூஜ்ஜிய FIRகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
9. தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து.
* தமிழ்நாட்டில் குற்றவாளிகளை கண்காணிக்கவும் குற்றங்களை தடுக்கும் முயற்சிகளிலும் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக, ‘பருந்து’ செயலி மூலம் சரித்திர பதிவேடு (history-sheeters) குறித்த தகவல்கள் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்படுவதற்கு முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், குற்றவாளியின் சிறைத்தண்டனை, நீதிமன்றங்களுக்கு வந்துபோவது மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் கண்காணிக்கப்படுகின்றன.
* (Facial Recognition System – FRS) மூலமாக, கடந்த கால குற்றப் பதிவுகளைக் கொண்ட நபர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுவரை 54,000-க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 220 பேர் குற்ற வழக்குகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
10. காவலரின் நலன் குறித்த நடவடிக்கைகள்:
* தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலரின் மன அழுத்தம் மற்றும் நலனை கவனத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. காவலர் முதல் தலைமை காவலர் பதவிக்கு உட்பட்டோர் வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும், காவல் சார்பு ஆய்வாளர் வரை இரு வாரங்களில் ஒரு நாள் அடிப்படையிலும் விடுமுறை பெறுகின்றனர்.
* மகிழ்ச்சி திட்டம் என்னும் சிறப்பு முயற்சி, காவலரின் மன அழுத்தத்தை கண்டறிந்து நிர்வகிக்க உதவுகிறது. இது பணி மற்றும் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவாரூர், மதுரை மற்றும் கோயம்புத்தூரில் இயங்கும் இந்த மையங்கள், 1300-க்கும் மேற்பட்டோருக்கு பயனளித்துள்ளது, குறிப்பாக மதுவின் தாக்கங்களை குறைக்கும் வகையில் சிறந்த முடிவுகளை வழங்கியுள்ளன.
* ஆனந்தம் திட்டம் என்பது பெண் காவலர்களுக்கான பணி-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும். அனைத்து மாவட்டங்களிலும் குழந்தை காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் பெண்களுக்கு இலவச பயண பாஸ் உள்ளிட்ட நலவசதிகள் வழங்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, வீட்டு வசதியில் 51% திருப்தி அளித்துள்ளது.
* மேலும், காவலர்களுக்கான விரிவான மருத்துவ பரிசோதனைகள், தரமான குறைதீர்ப்பு முகாம்கள், கடந்த ஆண்டுகளில் அளிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட சிறுதண்டனைகள் ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு உளவியல், நலன்கள் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அவர்கள் எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலைகளில் இருந்து (எ.கா., விபத்து, கொலை) எதிர்மறை தாக்கங்களை குறைக்கும் முயற்சிகளாகும்.
* காவல்துறை தலைமை இயக்குநர், இந்த செயல்திறன் வெற்றிக்கு தனது குழுவின் ஒத்துழைப்பையே காரணம் எனக் கூறுகிறார். மேலும், சைபர் குற்றங்கள், போதைபொருள் பயன்பாடு போன்றவை தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் குற்றங்களை முன்னதாகவே புகாரளிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.