பிரபல ஸ்டீல் நிறுவனங்கள் பெயரில் பலகோடி இணையவழி மோசடி! கூண்டோடு கைது செய்த புதுச்சேரி காவல்துறை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் புதுச்சேரியை சேர்ந்த சேதுராமன் என்பவர் இணைய வழி காவல் நிலையம் வந்து பேஸ்புக்கில் வைசாக் ஸ்டீல் (VIZAG STEEL) என்ற நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து மார்க்கெட் விலையை விட 10 சதவீதம் குறைவாக TMT rod பொருட்களை உங்களுக்கு தருகிறோம் என்று வந்த விளம்பரத்தை நம்பி மேற்கண்ட பேஸ்புக்கில் இருந்து போன் என்னை தொடர்பு கொண்டு அனைத்து விவரங்களையும் பெற்று அந்த நிறுவனத்தின் பெயரிலேயே GST எண் மற்றும் வங்கி கணக்குகள் இருந்ததால் 30 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி நான்கு நாட்கள் ஆகியும் மேற்கண்ட தொலைபேசி எண்ணையோ Facebook பேஜையோ தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஆகவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் கொடுத்தது சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr.S.பாஸ்கரன் PPS அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் S.தியாகராஜன் (Cr.No.104/2024 U/s 419,420 IPC, 66 C & D of I.T act 2000 dt.3.7.2024) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

Kauvery Cancer Institute App

விசாரணையின் முதற்கட்டத்திலேயே மேற்படி வைசாக் ஸ்டீல் நிறுவனத்தின் உண்மையான பேஸ்புக் பேஜ் அது இல்லை  என்பதும் இணைய வழி மோசடிக்காரர்களின் வேலை என்பதை உணர்ந்து பல்வேறு இணைய வழி காவல் நிலையத்தில் உள்ள நவீன தொழில்நுட்பத்துடன் ஆதாரங்களை ஆதாரம் மற்றும் தகவல்களை திரட்டி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கண்டுபிடித்த தகவல்களை அடுத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர்  நித்யா IPS உத்தரவின் பேரிலும் காவல் கண்காணிப்பாளர் Dr.S.பாஸ்கரன்  PPS அறிவுறுத்தலின்படி ஆய்வாளர்  S.தியாகராஜன் வழிகாட்டுதல் படி கீர்த்தி தலைமையிலான இணையவழி போலீசார் தலைமை காவலர் மணிமொழி காவலர்கள் வினோத், பாலாஜி மற்றும் வினோத்குமார் கொண்ட  தனிப்படை  அமைக்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி மத்திய பிரதேசம் விரைந்தனர்.

புதுச்சேரி காவல்துறைஅங்கு விசாரித்ததில்  குற்றவாளி ஜார்கண்டில் பதிங்கிருப்பது தெரியவந்தது பின்னர் தனிப்படை ஜார்கண்ட் விரைந்தனர். அங்கு மேற்கொண்ட விசாரணையில் குற்றவாளி பீகார் சென்றது தெரிய வந்தது. உடனே தனிப்படை பீகார் விரைந்தனர். பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் சென்று இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பலை ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கைது செய்தனர்,

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அவர்கள் பின்வருமாறு 1. ராகுல்குமார் சிங் (30) S/o, அனில் பிரசாத் சிங், No.124/125, முத்தவலி அஞ்சல், முத்தவலி தா, மங்கோவான், ராய்கர்ஷ் மாவட்டம்,  மகாராஷ்டிரா 402112. நிரந்தர முகவரி: கிராம அஞ்சல், சக்வாய் வாரிசாலிகஞ்ச், மாவட்டம் நவாடா, பீகார் 2. உத்தம் விஷால் குமார் (24) S/o அபினேஷ் சிங், வில் – ஸ்ரீ நகர், போஸ்ட் – ஷங்கர்டிஹ், தானா – தர்தாரி, பிலிச், நாளந்தா, பிலிச், பீகார் 3. ராயுஷன் குமார் (24) S/o சந்திர பூஷன் குமார், எண்.19, பரிபஹாரி பீகார் ஷெரீப், நல்லந்தா மாவட்டம், பீகார் – 803101. 4. அபிஷேக் குமார் (27) S/o அசோக் குமார் குப்தா, வில்- தெல்ஹாரா, போஸ்ட் – தெல்ஹாரா, நாளந்தா, பீகார் 801306. 5. தயாந்த் (30) S/o சித்தகவுடா, ஹாசன் மாவட்டம், பெல்லூர் தாலுகா, இப்பேடு, பெங்களூர் – 573110.

அங்கே விசாரணை மேற்கொண்டதில் 40க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப், டேப் மற்றும் 34 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இணைய வழி மோசடி கும்பலை பீகார் தலைநகரிலேயே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி கொண்டு வந்தனர்.

மேற்படி நபர்களை புதுச்சேரி கொண்டு வந்து விசாரிக்கும் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்படி இணைய வழி மோசடி கும்பல் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்களை கடந்த 2019 வருடம் முதல் பல்வேறு மிகப்பெரிய கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களின் பெயரைச் சொல்லி (Jindal Steal and Power, Vizag Steel Plant, JSW,  Zuari Cement) மற்றும் (Animal Foods Product Selling via online, Dhani Loan Processing, LAl Qila Basmati Rice , Online Clothing, Hotel Room Stay, Coconut Export, Coal India Pvt Ltd) அவர்களுடைய உண்மையான விளம்பர உத்திகளை இவர்களும் கையாண்டு பேஸ்புக் வங்கிக் கணக்கு, செல்போன்கள் போன்றவற்றை அந்த நிறுவனங்களுக்கு ஒத்துப் போகின்ற மாதிரி உருவாக்கி மோசடி பணங்களை பெற  வங்கி கணக்குகளை வாங்கி ஒரு சில வங்கி மேலாளர்களின் உதவியுடன் பணத்தை எடுப்பதற்கு ஒரு குழுவும், பொதுமக்களை ஏமாற்ற திறமையாக பேசுவதற்காக ஒரு குழுவும், வங்கி கணக்கை வாங்கிய கொடுப்பதற்கு ஒரு குழுவும், Facebook விளம்பரம் செய்ய மற்றும் அதில் பதிவு செய்ய பல்வேறு புகைப்படங்களை உருவாக்கவும், செல்போன் எண்களை வாங்க ஒரு குழுவும்.

மேலும் ஒவ்வொரு குழுவிற்கும் ஒருவரை தலைவராக நியமித்து அவர்களுக்கு கீழ் பல்வேறு நபர்கள் செயல் பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மோசடி செய்த பணத்தை இந்த குழுவினர் அனைவரும் பங்கு போட்டுக் கொண்டதும் தெரியவந்துள்ளது இந்த குழுவில் இன்னும் பல்வேறு நபர்கள் பீகார், உத்தரபிரதேஷ், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பதுங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி காவல்துறைமேற்படி நபர்களிடமிருந்து கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான விசாரணை மேற்கொண்டதில் 52 புகார்கள் இவர்கள் மீது இந்தியா முழுவதும் பதிவாகியுள்ளதும் மிக குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட புகார்கள் இவர்கள் மீது பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 32 கோடி ரூபாய்க்கு மேல் பொது மக்களின் பணத்தை இணைய வழி மூலமாக மேற்படி நிறுவனங்களின் பெயரை சொல்லி கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது மேற்படி நபர்களை இருந்து 20 டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது அதில் அவர்கள் யார் யாரை ஏமாற்றினார்கள் எந்தெந்த நிறுவனங்களின் பெயரை சொல்லி ஏமாற்றினார்கள் என்ற விவரங்களை குறித்து வைத்துள்ளனர் அது சம்பந்தமாக விசாரித்தால் இன்னும் பல கோடி ரூபாய் அவர்கள் இந்தியா முழுவதும் ஏமாற்றி இருப்பது தெரியவரும்.

மேற்படி இணையவழி மோசடி கும்பல் ஒரு ஒரு குழுவிற்கும் ஒருவர் தலைமை வகித்தது தெரியவந்துள்ளது. இப்போது கைது செய்து இருக்கும் கும்பல் இணைய வழியில் விளம்பரம் செய்து வங்கி கணக்கிற்கு பணத்தை பெறுவது மற்றும் அந்த பணத்தை எடுப்பது இவர்களுடைய வேலையாக இருந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டுமான நிறுவனங்கள் வைத்திருக்கின்ற உரிமையாளர்கள் இவர்களுடைய பேஸ்புக் விளம்பரத்தை நம்பி உண்மையான நிறுவனங்கள்தான் இவை என்று பணத்தை அனுப்பி உள்ளார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு நிறைய இரும்புகள், சிமெண்ட், இரும்பு தகடுகள் தேவைப்படுவதால் விலை குறைவாக இருக்கின்றது மேலும் இலவசமாக உங்கள் இடத்திற்கு வந்து சரக்கை இறக்கி வைக்கிறோம் என்று சொன்ன இரண்டு காரணங்கள் நம்பி பெரிய பெரிய கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் இவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆர்டர் செய்து ஏமாந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆறு மாத தகவல்கள் மட்டுமே இவ்வளவு கோடி ரூபாய் மோசடியாக கொள்ளையடித்திருப்பது தெரியவரவே கடந்த 2019 இல் இருந்து இவர்களுடைய மோசடி வேலையை கணக்கிட்டால் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்பது விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் ஒருவரை ஏமாற்றிய பிறகு அந்த செல்போனை இவர்கள் உபயோகப்படுத்துவதில்லை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தங்கள் உபயோகப்படுத்திய அனைத்து பொருட்களையுமே இவர்கள் மீண்டும் உபயோகப்படுத்தாததால் பழைய தகவல்களை திரட்டுவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இணைய யுக்திகளை வைத்து பழைய தகவல்களை திரட்ட போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

இதுவரை 8 மாநில போலீசாருக்கு இவர்கள் மேல் உள்ள 15 வழக்கை கண்டுபிடித்து இவர்கள் கைது செய்துள்ள விவரத்தை புதுச்சேரி இணைய வழி போலீஸ் ஆகிய நாங்கள் தெரியப்படுத்தி உள்ளோம். இன்னும் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக மற்ற மாநில போலீசாருக்கு தெரியப்படுத்த உள்ளோம்.

மேற்படி இணைய வழி மோசடி கும்பல் குறைந்தபட்சம் மூன்று லட்ச ரூபாயிலிருந்து 1.1/4 கோடி வரை கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் ஏமாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பெரும்பாலான பணத்தை இழந்தவர்கள் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களிடம் ஏமாந்து இருப்பது தெரிய வருகிறது. அது சம்பந்தமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா தெலுங்கானா, பீகார், உத்தர பிரதேஷ், டெல்லி, மத்திய பிரதேஷ், வெஸ்ட் பெங்கால் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில போலீசாருக்கு அவர்கள் வழக்கு சம்பந்தமாக இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் தெரியவரும் பட்சத்தில் அனைத்து மாநில போலீசாருக்கும் இது பற்றிய தகவல் தெரிவிக்கப்படும். மேற்கூறிய ஐந்து குற்றவாளிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

மேற்படி மோசடி கும்பலிடம் 5,400 நபர்களுடைய பெயர், விலாசம், வங்கி கணக்கு விவரம், செல்போன் நம்பர் போன்ற தகவல்களை அவர்களுடைய லேப்டாப்பை சோதனை செய்தபோது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் எந்த மாநில போலீசாரிடமும் இதற்கு முன் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கில் திறம்பட விசாரணை செய்த விசாரணை அதிகாரி ஆய்வாளர் S.தியாகராஜன் மற்றும் கேரளாவில் வெளியான Kannur Squad பட பாணியில் மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் சென்று பல இடையூறுகளை கடந்து துணிச்சலாக சென்று 5 குற்றவாளிகளை கைது செய்த ஆய்வாளர் B.C.கீர்த்தி மற்றும் தலைமை காவலர் மணிமொழி காவலர்கள் வினோத், பாலாஜி மற்றும் வினோத் குமார்  ஆகியோர்களை DIG சத்தியசுந்தரம் IPS மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் திருப்பாதி IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

மேலும் சமீபத்தில் நடைபெறும் இணைய வழி குற்றங்களான

*போலியான உடனடி கடன் செயலி மூலம் நீங்கள் கடன் பெற்றால் உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்களை மிரட்டி அதிக பணத்தை திரும்ப செலுத்துமாறு கூறுவார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம்.

*சமூக வலைதளமான whatsapp டெலிகிராம் குழுக்களில் தெரியாத சில நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம் அவர்கள் அனைவரும் இணைய வழி மோசடிக்காரர்கள்.

*மும்பை போலீஸ், CBI, TRAI இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு அழைப்புகள் வரலாம். இது இணைய வழி மோசடிக்காரர்கள் உங்களை பயமுறுத்தி பணத்தைப் பறிக்கும் முயற்சி ஆகையால் இதுபோன்று அழைப்புகள் வந்தால் உடனடியாக அந்த அழைப்பை துண்டிக்கவும்.

*ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு flipkart, amazon, meesho போன்ற அங்கீகரிக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் பொருட்களை வாங்க வேண்டும். விலை குறைவாக கிடைக்கின்றது என்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம், youtube போன்ற இணையதளங்களில் வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனை  வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் 1930 /04132276144 /9489205246 எண்கள் மூலம் இணைய வழி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் மற்றும் இணைய வழி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.