இறந்தவா்களை வைத்து கல்லா கட்டும் AI வீடியோ எடிட்டர்கள் !
திருமண நிகழ்வுகளில், இறந்த உறவினர்கள் சொர்க்கத்திலிருந்து இறங்கி வருவது போலவும், மணமக்களை ஆசீர்வதிப்பது போலவும், பந்தியில் அமர்ந்து உணவருந்துவது போலவும் AI வீடியோக்களை ஒளிபரப்பி, குதூகலமான மனநிலையில் உற்சாகமாக இருக்கும் மணமக்களையும், உறவினர்களையும் கதற வைப்பது #trending.
“அதெப்படி நான் செத்து போயிட்டேன்னு மறந்து, நீங்க மட்டும் ஆடிப்பாடி கல்யாண வீட்ல சந்தோஷமா இருக்கறது, கொஞ்ச நேரம் என்னை நெனச்சு கதறுங்க மை டியர் சொந்தங்களே, பந்தங்களே!” என்ற மனோபாவமா?
வீடியோ எடிட்டர்களுக்கு எக்ஸ்ட்ரா வருமானமா? I meant business strategy.
என்ன காரணத்திற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆண்கள் பொதுவாகவே Non expressive, அவர்களுக்கு குறிப்பாக மாப்பிள்ளைக்கு பெரிதாக பாதிப்பு ஏதுமில்லை.

ஒரு சில பெண்கள்தான் பாவம் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுவார்கள். சிலர் மிகவும் கவனமாக make up கலையாத வண்ணம் உணர்வுகளை வெளிப்படுத்துவர். ஆனால் லட்சக் கணக்கில் செலவு செய்து make up போட்டுக்கொண்ட கல்யாணப் பெண்தான் தேம்பித் தேம்பி அழுது, coating கரைய ஆரம்பித்து விடுகிறது. மீண்டும் make up போட வேண்டியிருக்கும். Make over artists இதற்கு double charge வாங்குகிறார்களா என்றும் புரியவில்லை.
திருமணம் என்பது மங்களகரமான ஒரு நிகழ்வு, அப்போது இறந்தவர்களை நினைவு கூர்வது அபசகுனம் அல்ல. இறந்து போன நம் உறவினர்களை தெய்வமாக நினைத்து மனதார வேண்டிக் கொண்டாலே போதும், அவர்தம் ஆன்மாக்கள் ஆசீர்வதிக்கும். அதை விடுத்து இந்த emotional scam என்பது வியாபார யுக்தியாகவும், அபத்தமாகவும் மட்டுமே தெரிகிறது. திருந்துங்க_மக்களே
— நித்யா இறையன்பு