300 ஆண்டுகள் பழைமையான ஓவியத்தை சேதப்படுத்திய பார்வையாளர்!
இத்தாலியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுக்கும் போது பார்வையாளர் ஒருவர் தவறுதலாக 300 ஆண்டுகள் பழைமையான புளோரன்ஸின் புகழ்பெற்ற உள்ள விலைமதிப்பற்ற ஓவியம் தடுமாறி விழுந்ததால் சேதமடைந்துள்ளது. இது 1712 ஆம் ஆஉஃபிஸி கேலரியில்ண்டில் அன்டன் டொமினிகோ கபியானியால் வரையப்பட்ட ‘சிடஸ்கன் இளவரசர் ஃபெர்டினாண்டோ டி மெடிசியின்’ உருவப்படம் தான் இந்த ஓவியம்.

இந்த கலை படைப்பின் மீது பார்வையாளர் பின்னோக்கி விழுந்ததால் அந்த ஓவியம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சேதத்தை விரைவாக சரி செய்ய முடியும் என்று அருங்காட்சியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உருவப்படம் உஃபிசியில் “புளோரன்ஸ் மற்றும் ஐரோப்பா: பதினெட்டாம் நூற்றாண்டின் கலைகள்” என்ற கண்காட்சியின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சுற்றுலா பயணி ஒருவர் வான் கோ நாற்காலியில் அமர்ந்து அதனை சேதப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. இது போன்ற சம்பவங்கள் விலைமதிப்பற்ற கலைப்படைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.