வாமன அவதாரம் – (குள்ள அவதாரம்) – ஆன்மீக பயணம்
வாமன அவதாரம் என்பது வைணவர்கள் முழுமுதற் கடவுள் ஆக கருதும் விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம் ஆகும். பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள அவதாரம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்த்து நின்றார். பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலமாகும் இந்திரனுடன் போர் செய்து பலி தோற்றான். மீண்டும் பலம் பெற்று எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் என தனக்குள் ஒரு பிரதிக்ஞை எடுத்துக்கொண்டான்.
பிருகு வம்சத்தில் தோன்றிய சுக்ராச்சாரியார் முதலிய அந்தணர்களை அணுகி ஆலோசனை செய்தான். அவர்கள் பலிச் சக்கரவர்த்தியிடம் விக்ரஜித் என்ற ஒரு பெரிய வேள்வியை நடத்தும் படி உபதேசம் செய்தார்கள். அவ்வாறு, அவர் வேள்வி செய்யவே அதில் இருந்து ஓர் பொன்ரதம் வெளிவந்தது. அந்த ரதத்தில் கணக்கற்ற வில்லும், அம்பும், கவசமும் இருந்தன. அதில், சிங்கத்து வஜம் கட்டப்பட்டு இருந்தது. அச்சமயம் பலியினுடைய தாத்தாவாகிய பிரகலாதன் அவன் முன் தோன்றி அவனுக்கு என்றும் வாடாத தாமரை மலர் மாலையை கொடுத்தார். சுக்ராச்சாரியார் ஒரு சங்கை கொடுத்தார். பலிச் சக்கரவர்த்தி வேள்விக்கு வந்திருந்த அந்தணர்களை வணங்கினான். சுக்ராச்சாரியாருடைய ஆசியையும் பெற்றான் ரதத்தில் ஏறினான். கவசத்தை தரித்து கொண்டான். ஒரு கையில் வில்லையும், மறுக்கையில் சங்கையும் தாங்கிக் கொண்டான்.
அசுர சேனைகள் குடை சூழ நேரே தேவலோகம் சென்றான். அமரர் உலக தலைநகர் ஆன அமராவதியை முற்றுகை இட்டான். அமராவதி பட்டணம் அழகு வாசம் செய்யும் இடம். இந்த எழிலார்ந்த நகரம் தனக்கு உடைமை ஆயிற்று என்ற உற்சாகத்தில் அசுரப் படைகளுடன் பலி இந்திர பட்டணத்தை தாக்கினான். பலி எழுப்பிய யுத்த சன்னத்தமாகிய சங்கு ஒலி கேட்டதும் இந்திரனுக்கு அச்சம் ஏற்பட்டது. உடனே, குல பிரகஸ்பதி ஆகிய வியாழபகவானை போய் கலந்து ஆலோசித்தான். தேவேந்திரன், பிரகஸ்பதியிடம் குரு பகவானே பலி முன்பை விட அதிக பராக்கிரமத்துடன் அசுர சேனைகளை திரட்டிக்கொண்டு நம்மை முற்றுகை இட்டிருக்கிறான். அவன் செய்த வேள்வியின் ஓம குண்டத்திலிருந்து தோன்றிய ரதத்தில் ஏறி வந்திருப்பதை பார்த்தால் நாம் அவனை ஜெயிக்க முடியாது என்று கருதுகிறேன்.
ஆகவே, நான் தங்களிடம் அடைக்கலம் தேடி தேவ சைன்யத்துடன் வந்திருக்கிறேன். இப்போது, நாம் என்ன செய்ய வேண்டும். சரியான உபாயம் சொல்லுங்கள் என்றான். தேவேந்திரனை நீ பலிச் சக்கரவர்த்தியை இந்த நிலையில் மோதுவது என்பது உகந்தது அல்ல. அவன் பிருகு வம்சத்து மகரிஷியின் பரிபூரண ஆசியை பெற்று வந்திருக்கிறான். அளவிலா பராக்கிரமம் பெற்றிருக்கிறான். இப்போது, நீ யுத்தம் செய்ய வேண்டாம்? நீங்கள் எல்லோரும் சொர்க்கத்தை விட்டுப் போய் விடுங்கள்? அவனுக்கு எப்படியாவது சொர்க்கத்தை தான் கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை. அந்த குறிக்கோளை அவன் அடைவது உறுதி இருந்தாலும் காலப்போக்கில் அவனே தன்னை அழித்துக் கொள்வான்.
எந்த மகரிஷிகளினால் அளப்பரிய பலத்தை பெற்றானோ அந்த மகரிஷிகளுக்கு அர்ப்பணம் செய்து அவர்களாலேயே அவன் அழிவை தேடிக்கொள்வான் கவலை வேண்டாம். நீயும் உன் ஆட்களும் ஸ்ரீமந் நாராயணனை தேடி சரணடையுங்கள். அவர் தான் பலிக்கு அழிவை தரக்கூடியவர் என்று பிரகஸ்பதி அறிவுரை செய்தார். இரு தேவருடைய வார்த்தைகளை தட்டாமல் இந்திரன் தேவர்களுடன் தேவலோகத்தை விட்டு வெளியே ரினான். அசுரருக்கு தெரியாத இடம் ஒன்றில் போய் மறைந்து கொண்டான். பலி இதனால் தேவலோகத்தை எளிதில் கைப்பற்றினான். அமராவதிலேயே தங்கி மூன்று உலகங்களையும் கட்டியாண்டான். தவிர, அந்தணர்களும், மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். அதனால் ஜீவராசிகளும் அவனை போற்றிப் புகழ்ந்தன.
பிறகு, வம்சத்தில் அந்தணர்கள் தங்கள் சீடனுக்கு வந்த இந்திர பதவியை பார்த்து மகிழ்ந்தனர். அவன் இந்த பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும் படியாக நூறு அசுவமேத யாகங்களை செய்யுமாறு அவனிடம் கூறினார்கள். பலியும் அசுவமேத யாகம் செய்து செய்யத் தொடங்கினான். இதனால், மூவுலகங்களிலும் இவன் புகழ் ஓங்கி நின்றது. தேவர்கள் தட்சன் மகளாகிய அதிதி என்பவளுக்கும் கச்சியப்பர் முனிவருக்கும் பிறந்தவர். இதனால், தன் மக்களுக்கு ஏற்பட்ட இழிய வழி நிலை வாழ்க்கையை எண்ணி அதிதி மிகவும் வருந்தினாள். இதை கண்ட கச்சியப்பர் அதிதி உன் முகம் வாடி இருக்கிறதே! நீ ஏதோ மன வருத்தம் அடைவதாக நினைக்கிறேன். மேலும், உனக்கு தெரியும்! அந்தணர்களுக்கும், சாதுக்களுக்கும் எவ்வித துன்பமும் ஏற்பட நியாயம் இல்லை என்றார்.
மகரிஷியே! நீங்கள் சொல்வது உண்மையே! சாதுக்களுக்கும் அந்தணர்களுக்கும் துன்பம் நேருவது இல்லைதான் ஆனால், அதில் தாங்கள் கொஞ்சம் வித்தியாசமானவர், தேவர்களும் உமது புத்திரர்கள், அசுரர்களும் உமது புத்திரர்கள் இருவரும் உமக்கு சமமே! எனினும், எனக்கு கண்கண்ட தெய்வமாகிய உங்களிடம் ஒன்றை வேண்டுகிறேன்? தேவலோகத்தில் எனது புத்திரர்களான தேவர்கள் பதவி சொத்து சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்? என்பதை தெளிவாக கூறுங்கள்; என்றாள். அதிதியின் வார்த்தைகளை கேட்டு சிரித்தார் கச்சியப்பர் பிரியே! உன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் நீ பரந்தாமனை தியானம் செய். அவர் உனக்கு நல்வழியை தந்தருள்வார்.
பரந்தாமனை அடைய வேண்டுமானால் எத்தகைய விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அதிதி வினவினாள். பியோவ் விரதம் எனப்படும் விரதத்தை பங்குனி மாதம் சுக்ல பட்சம் பிரதமை திதி வரும் நாளில் ஆரம்பித்து தொடர்ந்து 12 நாட்கள் கடைபிடித்து ஸ்ரீஹரி நாராயணரை சந்தோஷபபடுத்துவாயாக! என்றார் கச்சியப்பர். அதிதியும் அதை மேற்கொண்டால் விரதத்தை தவறாமல் கடைபிடித்தால் கடைசி நாள் அன்று பகவான் சங்கு சக்கரதாரியாக அவளுக்கு காட்சி கொடுத்தார். அப்போது, அவள் மனம் மிக மகிழ்ந்தது. தேவ மாதா அதிதி தேவியே!! உன் விரதத்தை கண்டு மகிழ்ந்தேன். நீ எதனால் இந்த விரதத்தை அனுஷ்டித்தாய் என்பதை நான் அறிவேன். இப்போது, உன் தேவகுமாரர்கள் பதவி இழந்து கதி இழந்து நிற்கின்றனர். அவர்களை மீண்டும் சொர்க்கலோக ஆட்சிக்கு ஆளாக்க வேண்டும். உன் புதல்வன் தேவேந்திரன் மீண்டும் அமராவதி நகரில் ஆட்சி செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறாய்? ஆனால், தற்சமயம் அது இயலாது அசுரர்கள் யாரும் வெல்ல முடியாதபடி பராக்கிரமம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் நல்ல காலம் அந்தணர்கள் பராமரிப்பில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். எனவே, போர் செய்து பயன்பெற முடியாது. ஆயினும், நீ என்னை வழிபட்டதற்குரிய பலன் உனக்கு நிச்சயம் உண்டு.
ஆகவே, உன் விருப்பத்தை வேறொரு விதத்தில் நிறைவேற்றி தருகிறேன். நானே உனக்கு புத்திரனாக பிறக்க வேண்டும் என்று மனதிலே எண்ணி நீ தியானம் செய். அதன்படியே பிறந்து தேவர்களை நான் காப்பாற்றுகிறேன்? இது **தேவரகசியம்** எவர்களிடமும் வெளியிடாதே? உன் ஆசை நிறைவேறும் அதிதியும் பகவான் திரு வார்த்தைப்படி தனக்கு திருமாலை மகனாக பிறக்க வேண்டும் என்று எண்ணி மகிழ்ந்தாள். வரம் கொடுத்தது போலவே பரந்தாமனும் அவளுடைய கர்ப்பத்தை அடைந்தார். புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் திருவோண (சிரவண) நட்சத்திரத்தில் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில் சூரியன் நடு பகலில் பிரகாசிக்கும் சமயம் பரந்தாமன் கச்சியப்பர் அதிதியின் புத்திரராக அவதாரம் செய்தார். இதற்கு, பெரியோர்கள் விஜய துவாதசி என்று பெயரிட்டனர். அப்போது தேவ துத்துபி முழங்கியது. மங்களகரமான துதிகளால் போற்றினர். பிறக்கும் போது அவர் தந்த காட்சியை கச்சியப்பரும் அதிதியும் பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஆனந்த கண்ணீர் சிந்தினர். சியாமள மேனி, சிறசிலே கிரீடம், காதிலே மகர கமல குண்டலங்கள், சங்கு சக்கரம், கதை ,தாமரை தாங்கிய நான்கு கரங்கள், நெஞ்சிலே ஸ்ரீவத்சனம், கைவல, தோல்வலை இடையிலே மேகலை, மஞ்சள் பட்டாடை, கழுத்திலே சுழல வனமாலையும், கௌஸ்துப மணியும் , திருவலங்கார புஷிதராகப் பெருமாள் காட்சி கொடுத்தார். பெற்றோர்கள் முன்பு இப்படி காட்சி கொடுத்த பெருமாள் நாடகத்தில் ஏற்படும் காட்சி மாற்றம் போல தன் உருவத்தை குட்டையான ஓர் அந்தணச் சிறுவனாக மாற்றிவிட்டார்.
அதிதியும் காச்சியரும் பல மகரிஷிகளை அழைத்து வரச் செய்து வாமனன் என்ற பெயரிட்டனர். தேவர்கள் குழந்தை பிறந்திருக்கும் ஆசிரமத்திற்கு வந்து வணங்கினர். பின்னர், மகரிஷிகள் பெருமானுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். அச்சமயம் கதிரவனே! அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான். பிரகஸ்பதி அவருக்கு பிரம்ம சூத்திரத்தை (பூணூலை) கொடுத்தார். கச்சி யப்பர் மூஞ்சியை கொடுத்தார். (மூஞ்சி என்றால் தர்ப்பையால் ஆன அரைஞான் கயிறு) பூமாதேவி கிருஷ்ணஜனத்தை (மான் தோலை) கொடுத்தாள். பிரம்மா கமண்டலம் வழங்கினார். குபேரன் பிச்சை பாத்திரம் கொடுத்தான். பார்வதி தேவி அதில் முதல் பிச்சை ஈந்தாள். இப்படி பலர் பல பரிசுகள் நல்கி மகிழ்ந்தனர். திருமாலின் திருவருளையும் வேண்டினர். இவ்வாறு, நிகரற்ற பேரும் புகழும் பெற்ற அந்தணச் சிறுவன் தனது வைதீக கர்மாக்களை தவறாது செய்து வந்தான்.
நர்மதா நதியின் வடகரையில் பலிச்சக்கரவர்த்தி ஒரு பெரிய யாகசாலை அமைத்தான். அந்த வேள்விக்கு மகரிஷிகளை எல்லாம் வரவழைத்திருந்தான். பெற்றோரிடம் அந்த யாக சாலைக்கு தான் போக வேண்டும் என்று கூறி அனுமதி கேட்டார். அவர்கள் அனுமதி தந்து ஆசி கூறி வழி அனுப்பி வைத்தனர். யாக சாலைக்குள் இவர் நுழைந்ததும் இவருடைய அரும்பெரும் ஜோதியினால் மற்ற இடம் எல்லாம் ஒளிமயமாகிவிட்டது. இவர் என்ன கதிரவனோ! அக்னி பகவானோ! அல்லது சாணக்குமாரனோ! என்று அநேகரும் சந்தேகித்தனர். அவரை பலி சக்கரவர்த்தி அன்புடன் வரவேற்றான். சுக்கியம் கொடுத்து திருப்பாத கமலங்களை கழுவி அந்நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டான். பின்னர், அகமும் முகமும் மலர வாமனரிடம் பலி பேசினான். சுவாமி தாங்கள் இந்த யாகசாலைக்கு எழுந்தருளியது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் பாத துளிகள் பட்டதன் காரணமாக முன்னோர்கள் நல்ல பதவியை பெற்று விட்டார்கள் என்று நினைக்கிறேன். தங்கள் பாதம் கழுவிய தீர்த்தத்தை தெளித்து நான் என் பாவங்களை போக்கிக் கொண்டேன். தங்களுக்கு ஏதாவது தேவை என்றால் அடியேன் சித்தமாக இருக்கிறேன்.
தாங்கள் தம் தேவைகளை பெற்று மேலும் என்னை **கிருக்கார்த்தன்** ஆக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பலியின் பிரார்த்தனை கேட்ட பகவான் வசூரேந்திரா! நீ கூறிய வார்த்தைகளை கேட்டு நான் உண்மையில் புழங்காகிதம் அடைகிறேன். நீயோ! பரம பாகவதனான பிரகலாதன் வம்சத்தில் பிறந்தவன். அதனால் மேலும், நீயும் மகரிஷிகளை மதித்து அவர்கள் வார்த்தைகளை தட்டாமல் கேட்டு அவர்கள் வலி நடக்கிறாய். அந்தணர்களுக்கு ஆவணம் செய்து ஆதரிக்கிறாய். இப்படிப்பட்ட உனக்கு என்ன குறை இருக்கப் போகிறது. அது மட்டுமா! உன் தந்தையோ தேவதைகள் அந்தணர்களாக வந்து அவனுடைய ஆயுளை யாசிக்கிறார்கள் என்று அறிந்தும் தெரிந்தும் யாசித்ததை அவன் கொடுக்கவில்லையா! அத்தகைய குலத்தில் உதித்த நீ !யாசிப்பவர்கள் எது கேட்டாலும் இல்லை என்று எண்ணாது கொடுக்கக் கூடியவன் என்பதை நான் அறிவேன். கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு பின்னால் வாக்கு மாறுவது என்பது பெருத்த அவமானம் என்பதை நீ அறியாதவன் அல்ல நான் உன்னிடம் விரும்புவது எல்லாம் எனது கால் அடியினால் மூன்று அடி நீலமே? அதற்கு மேலே எனக்கு எதுவும் தேவை இல்லை ஆக எனக்கு தேவையான மூன்று அடி நிலத்தை பெற்று போகவே வந்துள்ளேன் என்றார்.
சுவாமி என்னிடம் யாரெல்லாமோ எதை எதையோ கேட்டு பெற்றுச் சென்றிருக்கிறார்கள். தாங்களோ மிகவும் இளைய வயதினராக திகழ்கிறீர்கள். அப்படிப்பட்ட தாங்கள் தங்கள் காலடிகளால் மூன்றே மூன்று அடிகளே கேட்பதாக நினைக்கிறேன். பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கும் உங்களுக்கு பகவானை தியானிக்க சவுகரியமாக நிறைய மலர்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டத்துடன் கூடிய பெரிய நிலத்தையே தருகிறேன் என்றான். பலிச் சக்கரவர்த்தி அசுர ஸ்ரேஷ்டனே! நீ கூறிய வார்த்தையில் நான் மிகவும் திருப்தி பெற்றேன். ஆனால், எனக்கு நான் கேட்கும் மூன்று அடி நிலம் மட்டும் போதும் வேறு எதுவும் தேவை இல்லை என்றார். பலிச் சக்கரவர்த்தி அவரை வணங்கி தங்கள் விருப்பப்படியே தருகிறேன் என்று சொல்லிவிட்டு வாமனருக்கு தானம் செய்வதற்கு நீர் நிறைந்திருக்கும் கிண்டியை கையில் எடுத்தான். அந்நேரம் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சுக்கிரச்சாரியார் பலியை தனியே அழைத்தார். பலியே! இதோ இங்கே குள்ளமான உருவில் வந்து நிற்பது வேறு யாரும் இல்லை ஸ்ரீமந் நாராயணனே அவர் தேவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறார். எந்த காரியத்தையும் ஆராய்ந்து அவசரப்படாமல் சற்று நிதானமாகவே செய். நீ செய்ய போகும் காரியத்தால் உனக்கு மட்டும் அல்ல உன்னை சேர்ந்தவர்களுக்கும் உன்னை நம்பி இருக்கிற அசுரர்களுக்கும் அழிவு வந்திருப்பதை மறந்துவிடாதே, இப்பொழுதும் ஒன்றும் இல்லை வாக்கு கொடுத்து விட்டோமே என்ற தயக்கம் வேண்டாம். ஒரு சில இக்கட்டான நிலையில் வாக்கு தவறுவதை சாஸ்திரங்கள் சம்மதிக்கின்றன.
அது மட்டுமல்லாமல், ஒருவர் பிரம்மச்சரிய விரதம் பூண்டு பிறர் பொருளுக்கு ஆசைப்படும்போது நீ பொய் பேசுவது தவறு இல்லை. ஆகவே, உன் வாக்குறுதியை மறந்து விடுவாயாக என்று விளக்கமாக சுக்ராச்சாரியார் எடுத்துரைத்தார். ஆச்சாரியரே! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே இருந்தாலும் சற்று சிந்தித்துப் பாருங்கள்! என் குலம் எப்படிப்பட்டது நான் வாக்கு தவறினால் பரம பாகவதனான என் பாட்டன் பிரகலாதனுக்கு அல்லவா இழிவு. இந்த தூர்தன் பிரகலாத வம்சத்தில் பிறந்தவன் வாக்கு தவறி விட்டான் என்று அவர் பெயரை நினைத்து தானே உலகம் பழிக்கும். கொடுத்த வாக்கை பூர்த்தி செய்யாது காட்டிலும் நீ சிறந்த தர்மம் வேறு உண்டோ? தானம் செய்வதினால் நான் அனைத்தையும் இழந்தாலும் சரி ஓர் அந்தணனுக்கு அளித்த பிராமணத்தை ஒருபோதும் நான் மீற மாட்டேன். வந்திருப்பது பரந்தாமனே! என்று சொன்னீர்கள் பகவானே வந்து யாசிக்கிறார்; அது என் குலத்துக்கு ஏற்பட்ட பெருமையாகவே நினைக்கிறேன். அவருக்கு தானம் கொடுப்பதால் வரும் விளைவு எதுவாயினும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகி விட்டேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள்; தங்கள் பேச்சை கேட்கவில்லை என்று கருத வேண்டாம் நான் கொடுத்த வாக்குறுதியை மீறப்போவதில்லை என்றான் பலி.
அடே மூடா!! நான் உனக்கு விளக்கமாக கூறியும் என் பேச்சை கேட்காத நீ பதவியில் இருந்து பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்படுவாய் என்று சாபம் விட்டார் சுக்ராச்சாரியார். பலி அந்த நேரத்தில் தன் மனைவியை அழைத்து வாமனருக்கு நீர் வார்த்து கொடுக்க தயார் ஆனான். ஆனால், பிறகு வாமனருடைய திருப்பாத மலர்களை கழுவுவதற்கு ஒரு ஆசனத்தில் அமர்த்தினாள். பலியின் மனைவி விந்தியாவளி நீர் முகர்ந்து கொடுத்தாள். பலி அவருடைய பாதங்களை கழுவினான். அந்த நீரை தன் சிரசிலும் உடலிலும் தெளித்துக் கொண்டான். அவருக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்தான். நிலத்தை தானம் செய்யும் பொருட்டு தாரை வார்த்து கொடுப்பதற்காக கிண்டி செம்பை எடுத்தான். அது சமயம் தன் அறிவுரையை ஏற்காமல் பலி தாரை வார்த்து கொடுத்து ஏமாந்து விடப் போகிறானே? என்று எண்ணிய சுக்ராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து செம்பினுள் நுழைந்து நீர் வராத்தை அடைத்து கொண்டார். செம்பில் இருந்து நீர் வராததை உணர்ந்து பகவான் அருகம்புல் ஒன்றினால் துவாரத்தில் குத்தினார். அந்த அருகம்புல் துவாரத்தை அடைத்துக் கொண்டிருந்த சுக்ராச்சாரியாரின் கண்களில் ஒன்றை குருடாக்கியது. கிண்டி செம்பில் இருந்து நீர் வெளிவந்தது. மனைவி நீர் வார்க்க மகாபலி தாரை வார்த்தான்.
அந்தன குல திலகமே! உம் காலடி அளவில் மூன்று அடி நிலங்களை உமக்கு தானம் செய்கிறேன் என்று தெரிவித்தான். வாமன மூர்த்தி ஆகிய பகவான் முகம் மலர்ந்தபடி தன் இருக்கையில் இருந்து எழுந்தார். அப்போது, அவருடைய உருவம் வானளவி நின்றது. அவருடைய திருமேனி எங்கும் நீக்கமற நிறைந்து நின்றது. விண்ணும், மண்ணும், திசைகளும் மற்ற உலகங்களும் எழுகடலும் அத்தனையும் அவரிடம் அடங்கி இருந்தன. இதைக்கண்ட அசுரேந்திரன் பிரமித்து நின்றான். இத்துடன் ஸ்ரீ ஹரியாகிய வாமனரின் ஒரு கையில் சுதர்சன சக்கரம் சுழன்றது. மற்றொரு கையில் சாரங்கம் என்ற வில்லும் இன்னொரு கையில் கௌமோதகி என்ற கதையும் வேறொரு கையில் வித்தியாதரம் என்ற வாழும் பிடித்து நின்றிருந்தார். தேவர்களும் முனிவர்களும் பகவான் திவ்ய தரிசனத்தை கண்டு அவரை துதி பாடி வணங்கினார்கள். வானளவ நின்ற வாமணர் ஒரு காலால் பூமியை அளந்தார். மற்றொரு காலால் வானத்தை அளந்தார். ஆயினும் இரண்டாவது அடிக்கு ஆகாயம் போதவில்லை. இந்நிலையில், மூன்றாவது அடிக்கு இடம் ஏது? என்று வினாவினார். மீண்டும் தன் உடலை குறுகி வாமனராக நின்றார். அசுரேந்திரனே! நீ சகல தர்மங்களையும் அறிந்தவன். நீ இந்நேரம் என்னிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லையே ?ஆதலால், நீ நரகத்திற்கு போக வேண்டியதாகும் என்பதை நீ அறியாதவன் அல்லன் ஆக நீ அதற்காக என்ன தர போகிறாய். மகா பிரபு இந்த பலிச் சக்கரவர்த்தியை நீங்கள் அறியாதவர் அல்ல எப்போதும் நான் கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன். மூன்றாம் அடிக்கு தங்களுக்கு இடம் வேண்டும் அவ்வளவு தானே; இதோ! என் சிரசின் மீது தங்கள் காலடியை வைக்கலாம் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகவே இருக்கிறேன். அங்கே பிரகலாதன் வந்தான் வாமனரை வணங்கினான். அவனை சாஷ்டாங்கமாக பலியால் விழுந்து வணங்க முடியவில்லை. வருண பாசத்தினால் கட்டுப்பட்டது தான் காரணம்.
ஆகவே, தன் தலையை தாழ்த்தி தன் பாட்டன் ஆகிய பிரகலாதனுக்கு அஞ்சலி செலுத்தினான். பிரகலாதன் தன் கரங்களை உயர்த்தி பேரன் பலிக்கு ஆசி கூறிவிட்டு மகாவிஷ்ணுவிடம் பிரபு மகாபலிக்கு இந்திர பதவியை அளித்தவரும் தாங்களே இப்போது அதை பறித்து கொண்டதும் தாங்களே இவை அனைத்தும் உங்கள் திருவிளையாடல்கள். அனைத்தும் நன்மைக்கே என்பது எனது கொள்கை. மகாபலி மனைவியும் அறிவிலிகளாக இருந்த தங்களை காத்தருள வேண்டினாள். பிரம்மாவும் தயாநிதியே! தாங்கள் கருணை கூர்ந்து பலியின் விஷயத்தில் அவனுக்கு பரிபூரண அனுகிரகத்தை தந்தருள பிரார்த்திக்கிறேன். அப்போது, பகவான் திருவாய் மலர்ந்து பிரம்ம தேவனே! நான் யாருக்கும் என் அருளை அளிக்க விரும்புகிறேன் அவனுடைய செல்வத்தை பறிப்பேன் அப்படி செய்யாவிடில் அவன் செருக்கு என்னை சிந்திக்காமல் போய்விட கூடும். எனினும், உன்னை சரணடைந்தவர்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். இங்கே பலி தான் செய்யப்போகும் தான தர்மத்தால் தனக்கு பதவி பறிபோகும் துன்பம் வரும் என்று அவனுடைய குலகுரு சுக்ராச்சாரியார் சொல்லி தடுத்து நிறுத்த முயன்ற போதும் பலி தன் உறுதியை கைவிடவில்லை எனது மாயைகளை தேவர்களும் முனிவர்களும் கூட தாண்டுவது அரிது. ஆக, அவர்களாலும் அடைய முடியாத சிரேயஸ்ஸை பலி அடைந்து விட்டான்.
அடுத்து வரும் சாவரணி மனுவந்திர த்திலேயே பலியே இந்திரனாக விளங்கப் போகிறான். அதுவரை விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகத்தில் சகல சம்பத்துக்களும் பெற்று பலி அங்கு இருந்து வரட்டும் என்றார். பிறகு, பகவான் பிரகலாதனை அழைத்து அப்பா பரிகாத சிகுரான் மணி ஆகிய நீயும் சுதல லோகத்திற்கு போக கடவாய்! நான் அங்கு உங்களுக்கு துவார பாலகராக இருந்து ரட்சிப்பேன் என்று அனுகிரகித்தார். உடனே, பிரபோ! தங்களால் அசுரர் குலமே பெருமை அடைந்தோம். அவர்களின் சார்பாக அடியேன் தங்களை நன்றியுடன் வணங்குகிறேன் என்றான். அடுத்து சுக்ராச்சாரியாரை அழைத்த பகவான் ஆச்சாரியரே! யாகத்தை பூர்த்தி செய்யாதவன் பாவத்தை அடைவான் என்பதை நீர் அறிவீர் ஆகவே, பலியின் யாகத்தை பூர்த்தி செய்யவும் என ஆணையிட்டார். பின்னர், பாசத்தால் கட்டியிருந்த பலியை விடுவித்தார். பகவான் உடைய ஆணைப்படி சுக்ராச்சாரியாரும் யாகத்தை பூர்த்தி செய்தார். யாகம் நிறைவேறியதும் பலி எல்லோருக்கும் அஞ்சலி செய்தான். என் உற்றார் உறவினரோடும் சுதல லோகத்திற்கு பலி போனான். அனைவரும் அவனை பாராட்டினர். வாமன மூர்த்தியான பகவான் பலியிடம் இருந்து பெற்ற மூவுலகங்களையும் இந்திரனிடம் ஒப்புக்கொடுத்து தேவான கிரகம் செய்தவராய் அந்தஸ்தானமானார்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.