வழக்கறிஞரின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் !
உச்ச நீதிமன்றத்தின் மாண்பை கெடுக்கும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் மீது செருப்பை எடுத்து வீச முயன்ற வழக்கறிஞரின் அநாகரிகமான செயலை கடுமையாக கண்டித்தும், அவரின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் அக்-09 அன்று திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வழக்கறிஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, நீதித்துறையின் மாண்பை கெடுக்கும் வகையில் நடந்து கொண்ட வழக்கறிஞரின் செயலுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர். நீதித்துறை மற்றும் சட்டம் மீதான மரியாதையை காக்கும் வகையில் அனைத்து வழக்கறிஞர்களும் ஒன்றுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
— பிரபு
Comments are closed, but trackbacks and pingbacks are open.