118வது தேவர் ஜெயந்தி விழா ! காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை !
சாத்தூரில் தேசியத் தலைவர் பசுபொன் முத்துராமலிங்க தேவா் அவா்களின் 118வது ஜெயந்தியை முன்னிட்டு சாத்தூர் வடக்கு ரத வீதியிலிருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கினார்.
பின்னர், முத்துராமலிங்க தேவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கோசமிட்டு வீரவணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், வட்டார தலைவர்கள் சுப்பையா, சன் மாரிமுத்து, வழக்கறிஞர் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.