அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அக்யூஸ்டு அக்கவுண்ட்டிலிருந்து 1.7 இலட்சம் அபேஸ் ! பெண் எஸ்.ஐ. சஸ்பெண்ட்!

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் விற்று கைதாகி சிறைசென்ற குற்றவாளியிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனிலிருந்து 1.70 இலட்சத்தை ஆட்டையப்போட்ட எஸ்.ஐ. அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மேக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுரளி. இவர் தனது கடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்த கீழ்பென்னாத்தூர் போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பாலமுரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தண்டனை காலம் முடிந்து பாலமுரளி கடந்த 3 மாதத்திற்கு முன்பு வெளியே வந்தார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சிறையில் இருந்த காலத்தில் பாலமுரளியின் செல்போன் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. காவல்நிலையத்திற்கு சென்று செல்போனை வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றபோதுதான் வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ஜிபேவில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிந்தது.

இதுகுறித்து பாலமுரளி டிஜிபிக்கு ஆன்லைனிலும், எஸ்பி சுதாகருக்கும் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் எஸ்பி சுதாகர் நடத்திய விசாரணையில் பாலமுரளியின் செல்போனில் கீழ்பென்னாத்தூர் எஸ்.ஐ. கவிதா ரூ.1.70 லட்சத்தை அவரது உறவினர் செல்போனுக்கு பண பரிவர்த்தனை செய்து பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து எஸ்ஐ கவிதாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டிருக்கிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - MMM TRICHY -

 -அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.