காவல்நிலைய கொட்டடி இரட்டை கொலை வழக்கு ! போலீசார் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை !
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ் – ஜெயராஜ் போலீஸ் கொட்டடி கொலை வழக்கில் தொடர்புடைய 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்திருக்கிறார், மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன்.
இரட்டை ஆயுள் தண்டனையுடன், இந்த குற்றத்தில் அவரவர்களுக்கான பங்கை பொறுத்து கூடுதல் சிறை தண்டனையும் அபராதத்தையும் சேர்த்தே விதித்திருக்கிறது, நீதிமன்றம். இதன்படி, ஆய்வாளர் ஸ்ரீதருக்கு 14 ஆண்டு சிறை மற்றும் 84 இலட்சம் அபராதம்; எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கு 8 ஆண்டு சிறை மற்றும் 84.10 இலட்சம் அபராதம்; எஸ்.ஐ. ரகுகணேஷுக்கு 18 ஆண்டுகள் சிறை மற்றும் 54 இலட்சம் அபராதம்; தலைமை காவலர் முருகனுக்கு 18 ஆண்டுகள் சிறை மற்றும் 50 இலட்சம் அபராதம்; காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு 18 ஆண்டுகள் சிறை மற்றும் 40.46 இலட்சம் அபராதம்; காவலர் முத்துராஜாவுக்கு 18 ஆண்டுகள் சிறை மற்றும் 32 இலட்சம் அபராதம்; காவலர் சாமதுரைக்கு 8 ஆண்டுகள் சிறை மற்றும் 2.25 இலட்சம் அபராதம்; காவலர் செல்லதுரைக்கு 8 ஆண்டுகள் சிறை; காவலர் வெயிலுமுத்து 14 ஆண்டுகள் சிறை என்பதோடு மட்டுமின்றி, 9 போலீசாரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டு, நாடே உற்றுநோக்கிய வழக்கில், தனிச்சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.
மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு 1.4 கோடி இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், அதிமுக ஆட்சியில் எடப்பாடி முதல்வராக இருந்த சமயத்தில் நடைபெற்ற காவல் நிலைய கொட்டடி இரட்டை கொலை வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.