துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு…!👮♂️👏
தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெட்ரோ பஜார் அருகில், கையில் வாளுடன் ஒருவரை தாக்க முயன்ற குற்றவாளியை, தனது பணி ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம் மற்றும் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய தஞ்சை மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சம்மந்தம் அவர்களுக்கு பாராட்டுக்கள்! 💐
அவரது கடமைப்பற்று, தன்னலமற்ற சேவை மனப்பான்மை மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உறுதியான செயல்பாடு மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம் இ. கா. ப.,அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.