வாட்டர் ஹீட்டர் மூலம் மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி ! குளித்தலை சோகம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வாட்டர் ஹீட்டர் மூலம் மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி ! குளித்தலை சோகம் !

வீடு
வீடு

Frontline hospital Trichy

குளித்தலை அருகே சிவாயத்தில் கொத்தனார் மகள் 5 வயது சிறுமி கபிஷா இன்று  25.01.2024 காலை மின்சாரம் தாக்கி பலியான சோகம். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கொத்தனார் வேலை பார்த்துவரும் ரங்கராஜன். இவரது மனைவி பார்வதி இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மூன்றாவது மகளான கபிஷா வயது 5. சிறுமி அங்குள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வருகிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இன்று காலை‌ 8.30 மணியளவில் வீட்டில் பார்வதி குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் வெந்நீர் போட்டுள்ளார். இதனை எதிர்பாராத விதமாக தொட்ட கபிஷா மின்சாரம் தாக்கி வீட்டிலேயே பலியானார். சம்பவம் அறிந்த குளித்தலை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் பெற்றோர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-நௌஷாத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.