டங்ஸ்டன் திட்ட ரத்து அரசாணையை வெளியிட வேண்டும் – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு, சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எப்ரல் 6 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் 24 வது அகில இந்திய மாநாட்டில் முடிவு செய்வோம் என மதுரையில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலைக்கு இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சண்முகம் கூறுகையில்,

Kauvery Cancer Institute App

சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி...
சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி…

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த அரசாணையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போதும் போல டங்ஸ்டன் விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்கிறார், திருப்பரங்குன்றம் மலைக்கோவில் வழிபாடு விவாகரத்தில் மதப் பிரச்சனை வராத அளவிற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

மக்கள் சார்ந்த பிரச்சனைகளில் விஜய் கவனம் செலுத்துவதில் நாங்கள் வரவேற்கிறோம், இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு, சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எப்ரல் 6 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் 24 வது அகில இந்திய மாநாட்டில் முடிவு செய்வோம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

3 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளா கன்னுரில் நடைபெற்ற 23 வது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகிறோம், திமுகவின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கவில்லை, எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம், வரவேற்க வேண்டியதே வரவேற்கிறோம்” என கூறினார்.

 

—   ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.