மதுரை சிலைமான் அருகே 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
மதுரை சிலைமான் அருகே ராமநாதபுரம் சாலையில் 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் கைது
மதுரை சிலைமான் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து அந்த வாகனத்தை சோதனை மேற்கொண்டதில் 40 மூடைகளில் 1600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது தொடர்ந்து வாகனத்தை ஒட்டி வந்த மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து குடிமைப் பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்
மேலும் ரேஷன் அரிசியபறிமுதல் செய்து தலைமறைவாக இருக்கும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
– மதுரை ஷாகுல்