சென்னைவாழ் மக்களிடம் ஒரு கேள்வி …

0

சென்னைவாழ் மக்களிடம் ஒரு கேள்வி …ஆம்னி பஸ்களின் அழிச்சாட்டியம் 😡😡, கொள்ளைக் கட்டணத்திற்கு இரயில்களின் பற்றாக்குறை மிகமுக்கிய காரணம் என்பதை நாம் ஏன் அறிவதில்லை .

சென்னையில் பெருங்கூட்டம் சொந்த ஊருக்கு விடுமுறை நாளில் பயணிக்கும் போது , தொடர்ந்து மாநில அரசு சார்ந்த பேருந்து இயக்கத்தை பற்றியே வண்டி , வண்டியாக குறைகளை அள்ளிக் கொட்டும் ஊடகங்களும் சரி, பொதுமக்களும் சரி ,

ஒன்றிய அரசின் இரயில்களின் இயக்கத்தை பற்றி வாயே திறப்பதில்லையே ஏன் ? தீபாவளி, பொங்கல் பண்டிகைக்காக முன்பதிவை துவக்கிய 30 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்று திற்கிறது எனில் , மீதமிருக்கும் மக்களுக்காக கூடுதல் இரயில்களை இயக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை இல்லையா ? இதற்காக கோயம்பேடு சாலைகளில் அமர்வது போல் எத்தனை பேர் இரயில் நிலையங்களில் போராட்டத்துக்காக அமர்ந்திருப்பார்கள் ?

பண்டிகை நாட்களை விடுங்கள், சாதரண நாட்களில் ஈரோட்டிலிருந்து சென்னை செல்ல 20 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் தேடினால் கூட கிடைப்பதில்லை . சென்னையிலிருந்து ரயிலில் வருபவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது போன்ற நிலையே உள்ளது .

- Advertisement -

4 bismi svs

வந்தேபாரத்தை ப்ரோமோட் செய்ய அனைத்து ரயில்களையும் சூப்பர் பாஸ்ட் என்றாக்கி , பேசஞ்சர் ரயில்களே இல்லை என்னும் நிலையை உருவாக்கி , ரயில் நிறுத்தங்களின் அளவை பெருமளவு குறைத்து எத்தனையோ அக்கப்போர்களை உருவாக்கி வரும் ஒன்றிய அரசை எப்போது கேள்வி கேட்க போகிறோம் .

பேருந்து இல்லையென்றால் அமைச்சர் சிவசங்கரை சூழ்ந்து நின்று குரல் எழுப்பும் நாம் , என்றாவது ரயில்களில் டிக்கெட் இல்லையென ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணங் பெயரையாவது யோசித்தது உண்டா ?

அனிச்சம் கனிமொழி .

@kanimozhi natarajan

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.