“ஆண் பாவம் ” என வைக்கப்பட்ட தலைப்பு ” ஆண் பாவம் பொல்லாதது ” ஆனது… ! என்ன சொல்வதென்று தெரியில்லை..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

என்ன சொல்வதென்று தெரியவில்லை. மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். நான் இரண்டு வருடங்களுக்கு முன் தயார் செய்த கதையும், திரைக்கதையும் அப்படியே இன்னொரு இயக்குனரால் படமாக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின்  போஸ்டர் வெளியான போதே சந்தேகித்தேன். ஆனால் வேறு கதையாக இருக்குமென்று தாண்டிச் சென்றுவிட்டேன். ஆனால் இன்று இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் (டிரைலரை) பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன்.

"ஆண் பாவம் "நான் “ஆண் பாவம் ” என வைக்கப்பட்ட தலைப்பு ” ஆண் பாவம் பொல்லாதது ” என அவர்களால் வைக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டால் ஒத்த சிந்தனை என்று சொல்வார்கள். ஒத்த சிந்தனையாக இருந்தாலும் அப்படியே அப்பட்டமாக நான் எழுதிய வசனங்கள் முன்னோட்டத்தில் உள்ளது‌. ஆதாரமாக எனக்கு நானே ஸ்கிரிப்ட் அனுப்பிய மின்னஞ்சல் மட்டுமே உள்ளது.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

நம்பிக்கையுள்ள நண்பர்களுக்கு மட்டுமே முழுதிரைக்கதையும் விவரித்திருக்கிறேன். பள்ளி, கல்லூரி, காதல், ஐடி வேலை, மனைவியின் டார்ச்சர், குழந்தை, கிரெடிட் கார்டு மற்றும் கடன் என ஒரு ஆண் தன் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக எழுதியிருக்கிறேன்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இராம்குமார் நாகலிங்கம்
இராம்குமார் நாகலிங்கம்

நான் கனவுகளோடு எழுதப்பட்ட கதையும் திரைக்கதையும் இன்னொருவரின் சிந்தனையில் அப்படியே அப்பட்டமாக இருப்பது தான் எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த கதையும், திரைக்கதையும் இயக்குனரின் சொந்த சிந்தனை என்றால் வரவேற்கலாம். ஆனால் திருடப்பட்டதென்றால் இன்று தப்பித்தாலும் அதன் பலனை கண்டிப்பாக ஒரு நாள் அனுபவிப்பார்.

யார நம்புறதுனே தெரியல தாஸ் அண்ணா…

 

—   இராம்குமார் நாகலிங்கம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.