27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து கேட்டு
தவெக. தலைவர் விஜய்யிடம் விவாகரத்து கேட்டு, நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்திருக்கிறார். ’’நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருக்கிறார். நான் கண்டுபிடித்த பிறகும் அந்த உறவை விஜய் தொடர்ந்து வந்தார். நடிகையுடன் உறவை விஜய் தொடர்ந்ததால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். விஜய்யால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் திருமணத்தை மீறிய உறவைத் தொடர்ந்தார் விஜய். நடிகையுடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த நடிகை, இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்தப் படங்கள் எனக்கு அவமானத்தைத் தருகிறது’’ என மனுவில் சொல்லியிருக்கிறார் சங்கீதா.
திருமணம் நடந்து 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறியிருக்கிறார் சங்கீதா. 1999 ஆகஸ்ட் 25-ஆம் தேதி விஜய் – சங்கீதா திருமணம் சென்னையில் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்மறை ஒலிக்கத் தாலி கட்டினார் விஜய், பிறகு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அனாதை ஆசிரமத்துக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு மணமக்கள் உணவளித்தார்கள்.
திருமணத்தில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் வலம்புரிஜான், சோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
— பரகத்அலி, மூத்த பத்திரிகையாளர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.