வேளாண்துறை ஊழலும் இலஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்குகளும் !
தமிழக வேளாண் துறையும் ! வேரூன்றிய ஊழலும் !
தமிழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ், வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண்மை விற்பணை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை ஆகிய ஆறு தனித்துறைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகின்றது.
ஒட்டுமொத்தமான இத்துறைகளின் சார்பில், மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியோடு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 40% பேர் விவசாயத்தைதான் அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டிருப்பதால், விவசாயிகளின் நலனிலிருந்து அவர்களுக்கான விதை நெல் வழங்குவது தொடங்கி, உரம், பூச்சி மருந்து, உழுபடை கருவிகள், நீர்ப்பாசன அமைப்புகள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி விவசாயத் தொழிலை மேம்படுத்தும் நோக்கிலான திட்டங்கள் அவை.
ஆறு தனித்துறைகளை உள்ளடக்கிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு எதிராக, கடந்த 2017 தொடங்கி 2025 வரையிலான 18 ஆண்டு காலத்தில், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு போலீசில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 29.
மானியத்தில் வழங்க வேண்டிய விதை நெல், உரம், பூச்சி மருந்து வழங்குவதில் மோசடி தொடர்பாக 9 வழக்குகள்; செய்யாத வேலையை செய்ததாகக் காட்டி பல்வேறு திட்டங்களில் மோசடி செய்ததாக 2 வழக்குகள்; பல்வேறு வகையான சான்றுகள் வழங்குவதற்கு இலஞ்சம் பெற்றதாக 5 வழக்குகள்; விவசாயிகளை சுற்றுலா அழைத்துச் சென்றதாக மோசடி செய்ததாக 3 வழக்குகள்; அதிரடி ஆய்வு நடத்தி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக 6 வழக்குகள்; அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 3 வழக்குகள்; பிற வகையில் ஒரு வழக்கு என பதிவாகியிருக்கிறது. தொடர்ச்சியாக, ஒரே வகையான குற்றச்சாட்டின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என்பதிலிருந்தே, வேளாண்மைத்துறையின் ஊழலை புரிந்து கொள்வதற்கு போதுமான சான்றாக அமைந்திருக்கின்றன.
இவ்வாறு பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை தப்புவிக்கும் நோக்கில், பல்வேறு ஓட்டைகளை கொண்டிருக்கிறது என்பது தனிக்கதை.
இன்னும் சொல்லப்போனால், முதல்நாள் புகார் கொடுத்து மறுநாள் பதிவான வழக்குகள் என்பதாக குற்றம் நிகழ்ந்த சமயத்திலேயே பதிவான வழக்குகள் என்று எடுத்துக் கொண்டால், வெறும் 6 வழக்குகள் மட்டுமே. அவையெல்லாம், பல்வேறு வகையான சான்றுகளை வழங்க இலஞ்சம் கேட்டார், மானியத்தில் டிராக்டர் வழங்க இலஞ்சம் கேட்டார் என்ற ரீதியிலான சில்லறை புகார்கள்.
எஞ்சியுள்ள 23 வழக்குகளும் போதுமான அவகாசத்துடன் முதற்கட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்து நீதிமன்ற தலையீட்டையடுத்து பதிவான வழக்குகள்தான். இன்னும் குறிப்பாக, பல வழக்குகள் பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்சம் ஓராண்டு காலத்துக்குப் பிறகு பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 15. ஆக, பதிவான வழக்குகளில் சரிபாதிக்கு மேலான வழக்குகள் நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகே பதிவாகியிருக்கின்றன என்பதுதான்.
தனக்கு கீழாக பணியாற்றும் அதிகாரிகளை வழிநடத்த வேண்டிய, மாநில அளவிலான அதிகாரிகளே கீழ்மட்ட அதிகாரிகளுடன் கை கோர்த்துக் கொண்டும் இன்னும் சொல்லப்போனால், மாவட்ட அளவிலான வேளாண் உதவி இயக்குநர்களையே, புரோக்கர்களாக மாற்றியிருக்கிறார்கள் என்பதுதான் இந்த முதல் தகவல் அறிக்கைகளின் சாரம். அடி முதல் நுனி வரையில் ஊழல் முறைகேட்டில் ஊறித்திளைக்கிறது, வேளாண்துறை என்பதற்கு இதற்குமேலும் சான்றுகள் வேண்டுமா, என்ன?
1.மானியத்தில் வழங்க வேண்டிய விதை நெல் உரம் பூச்சிமருந்து வழங்குவதில் மோசடி :
மாவட்டம் : நாகப்பட்டினம்
எஃப்.ஐ.ஆர். : 4/2018
பதிவு செய்யப்பட்ட நாள் : 23.07.2018
குற்றம் நிகழ்ந்த காலம் : 2014 – 2015
புகார் கொடுத்தது : வி.தமிழரசி, இன்ஸ்பெக்டர், ஊழல் தடுப்பு பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : ஜி.மணிகண்டன், உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்டு 6 பேர்.
குற்றச்சாட்டுகள் : NMAET திட்டத்தின் கீழ் மானிய விலையில் விதை நெல் வழங்குவதில் மோசடி. போலி ரசீது, விவசாயிகளின் கையெழுத்தை போலியாக போட்டது. ரூ. 7,34,366/- மோசடி.
மாவட்டம் : ஈரோடு
எஃப்.ஐ.ஆர். : 4/2019
பதிவு செய்யப்பட்ட நாள் : 26.03.2019
குற்றம் நிகழ்ந்த காலம் : 2012 – 2016
புகார் கொடுத்தது : நடராஜன், இன்ஸ்பெக்டர், ஊழல் தடுப்புப்பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : சண்முகசுந்தரம், உதவி இயக்குநர் வேளாண்துறை உள்ளிட்டு 12 பேர்.
குற்றச்சாட்டுகள் : ICDP, NADP, விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்குவதில் பல்வேறு முறைகேடு.
மாவட்டம் : வேலூர்
எஃப்.ஐ.ஆர். : 4/2020
பதிவு செய்யப்பட்ட நாள் : 20.06.2020
குற்றம் நிகழ்ந்த காலம் : 2012 – 2014
புகார் கொடுத்தது : எம்.இரஜினிகாந்த், இன்ஸ்பெக்டர், ஊழல் தடுப்புப்பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : மகேந்திர பிரதாப் தீக்சித், உதவி இயக்குநர் வேளாண்துறை உள்ளிட்டு 6 பேர்.
குற்றச்சாட்டுகள் : NADP திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிமருந்துகளை மானிய விலையில் வழங்குவதில் முறைகேடு. ரூ.10,44,401/- மோசடி.
மாவட்டம் : திருவாரூர்
எஃப்.ஐ.ஆர். : 01/2020
பதிவு செய்யப்பட்ட நாள் : 21.09.2020
குற்றம் நிகழ்ந்த காலம் : 2014-15
புகார் கொடுத்தது : இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, ஊழல் தடுப்புப் பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் :
உதவி வேளாண் அலுவலர்கள் உள்ளிட்டு 8 பேருக்கு எதிராக.
குற்றச்சாட்டுகள் : மானிய விலையில் விதைநெல் விநியோகம் செய்ததில் முறைகேடு. போலியான பில் தயாரித்தது; விவசாயிகளின் கையெழுத்தை போர்ஜரியாக போட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்.
மாவட்டம் : வேலூர்
எஃப்.ஐ.ஆர். : 3/2021
பதிவு செய்யப்பட்ட நாள் : 03.03.2021
குற்றம் நிகழ்ந்த காலம் : 2017 – 2018
புகார் கொடுத்தது : எம்.இரஜினிகாந்த், இன்ஸ்பெக்டர், ஊழல் தடுப்புப் பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : கே.சத்யலெட்சுமி, வேளாண் அலுவலர்.
குற்றச்சாட்டுகள் : IFS திட்டத்தின் கீழ் மானியத்தில் பசுமாடுகள் வழங்கியதில் முறைகேடு. உண்மையான பயனாளிகளுக்கு வழங்காமல், தனது தந்தை, அத்தை, தம்பி மனைவி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியது. உரங்கள் வாங்கி விவசாயிகளுக்கு விநியோகித்ததாக, பொய் கணக்குக் காட்டி 5 இலட்சம் மோசடி செய்தது.
மாவட்டம் : விழுப்புரம்
எஃப்.ஐ.ஆர். : 9/2021
பதிவு செய்யப்பட்ட நாள் : 24.08.2021
குற்றம் நிகழ்ந்த காலம் : 16.10.2014 – 31.03.2016
புகார் கொடுத்தது : மெல்வின் ராஜாசிங், டி.எஸ்.பி., ஊழல் தடுப்புபிரிவு
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : சங்கர், இணை இயக்குநர், வேளாண்துறை, (முன்னாள் ) செயலர், வேளாண் சந்தைப்படுத்தல் குழு.
குற்றச்சாட்டுகள் : வேளாண் சந்தைப்படுத்தல் குழுவின் செயலராக பணியாற்றிய காலத்தில், மோசடியான பில்களை சமர்ப்பித்து பண மோசடி செய்த புகார். ரூ. 5,44,07,755/- கோடி இழப்பு.
மாவட்டம் : கள்ளக்குறிச்சி
எஃப்.ஐ.ஆர். : 1/2022
பதிவு செய்யப்பட்ட நாள் : 15.10.2022
குற்றம் நிகழ்ந்த காலம் : 14.10.2022
புகார் கொடுத்தது : எம்.எஸ். ஜெயசெல்வி, துணை ஆய்வுக்குழு அலுவலர். (திடீர் சோதனை)
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : வேளாண் உதவி இயக்குநர் டி.சுப்பிரமணியன் உள்ளிட்டு 4 பேருக்கு எதிராக .
குற்றச்சாட்டுகள் : மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உளுந்து விதைகளை கூடுதல் விலைக்கு விற்றது. திடீர் ரெய்டில் ரூ.4,26,280/- பிடிபட்டது.
மாவட்டம் : அரியலூர்
எஃப்.ஐ.ஆர். : 3/2024
பதிவு செய்யப்பட்ட நாள் : 21.08.2024
குற்றம் நிகழ்ந்த காலம் : 20.08.2024
புகார் கொடுத்தது : ப.குணசேகரன், துணை ஆய்வுக்குழு அலுவலர். (திடீர் சோதனை)
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : கே.எழில்ராணி, மண்டல வேளாண் உதவி இயக்குநர் உள்ளிட்டு 4 பேர்.
குற்றச்சாட்டுகள் : மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இடுபொருட்களை, தனியே விற்பனையாளர்களை அமர்த்தி விலைக்கு விற்றது. ரூ.4,60,430/- கைப்பற்றப்பட்டது.
மாவட்டம் : திருச்சி
எஃப்.ஐ.ஆர். : 5/2025
பதிவு செய்யப்பட்ட நாள் : 19.05.2025
குற்றம் நிகழ்ந்த காலம் : 26.02.2021 -30.10.2023
புகார் கொடுத்தது : அப்துல்லா நீதிமன்ற வழக்கு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : முருகேசன் (முன்னாள்) வேளாண் இணை இயக்குநர் மற்றும் செல்வம் (முன்னாள்) வேளாண் துணை இயக்குநர்
குற்றச்சாட்டுகள் : 14 வகையான விவசாய திட்டங்கள் மற்றும் பண்ணைக்கருவிகள் கொள்முதல் செய்வதில் குற்றமுறு நம்பிக்கை மோசடி செய்து முறைகேடு செய்த குற்றம்.

2.செய்யாத வேலையை செய்ததாக காட்டி பல்வேறு திட்டங்களில் மோசடி:
மாவட்டம் : விருதுநகர்
எஃப்.ஐ.ஆர். : 2/2019
பதிவு செய்யப்பட்ட நாள் : 22.02.2019
குற்றம் நிகழ்ந்த காலம் : 2007 -2008
புகார் கொடுத்தது : ராஜா
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : ஜி.மோகன், உதவி பொறியாளர், வேளாண் பொறியியல் துறை மற்றும் வி.சக்திவேல், உதவி செயற்பொறியாளர்.
குற்றச்சாட்டுகள் : நபார்டு திட்ட உதவியுடன் RIFD திட்டத்தில் முறைகேடு. குளங்கள் மற்றும் விவசாய கிணறுகளை தூர்வாறுதல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பாசனத் திட்டங்களில் முறைகேடு செய்தது. மோசடியான ஆவணங்களை உருவாக்கியது. அரசுக்கு ரூ. 71,89,763/-.இழப்பு ஏற்படுத்தியது.
மாவட்டம் : சேலம்
எஃப்.ஐ.ஆர். : 18/2019
பதிவு செய்யப்பட்ட நாள் : 26.09.2019
குற்றம் நிகழ்ந்த காலம் : 2009 – 2014
புகார் கொடுத்தது :
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : என்.சுப்ரமணியசிவா, வேளாண் அலுவலர் உள்ளிட்டு இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் 5 பேர்.
குற்றச்சாட்டுகள் : NWDPRA திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளில் மாபெரும் மோசடி. செய்யாத வேலையை செய்ததுபோல காட்டி பல கோடி மோசடி.
3. பல்வேறு சான்று வழங்குவதற்காக இலஞ்சம் :
மாவட்டம் : கோயம்புத்தூர்
எஃப்.ஐ.ஆர். : 5/2018
பதிவு செய்யப்பட்ட நாள் : 22.05.2018
குற்றம் நிகழ்ந்த காலம் : 10.04.2018 – 21.05.2018
புகார் கொடுத்தது : ஐ.அசோக்குமார், வி.எல்.புரோமோட்டர்ஸ், கோவை.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : சுகுமார், இணை இயக்குநர், வேளாண்துறை மற்றும் உதவியாளர் முருகன்.
குற்றச்சாட்டுகள் : விவசாயத்துக்கு தகுதியற்ற நிலம் என்று தடையில்லா சான்று வழங்குவதற்கு முதலில் 4 இலட்சமும்; பிறகு, 10 ஏக்கர் நிலத்தை பிரித்து பிளாட்டா வித்து இலாபம் சம்பாதிக்க போறீங்க… நானே குறைச்சலாதான் கேட்டிருக்கேன் … என பேரம் பேசி, கடைசியில் 2 இலட்சம் இலஞ்சம் கேட்டது.
மாவட்டம் : காஞ்சிபுரம்
எஃப்.ஐ.ஆர். : 8/2018
பதிவு செய்யப்பட்ட நாள் : 30.08.2018
குற்றம் நிகழ்ந்த காலம் :
புகார் கொடுத்தது : ரமேஷ்
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : ரவி, வேளாண் உதவி இயக்குநர்.
குற்றச்சாட்டுகள் : 1.14 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வேர்க்கடலை பயிரிட்டிருந்த நிலையில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய நிலையில், அதற்குரிய இழப்பீட்டை பெறுவதற்காக பயிரின் சேதார மதிப்பு குறித்த சான்று வழங்குவதற்கு இலஞ்சம் கேட்ட விவகாரம்.
மாவட்டம் : கரூர்
எஃப்.ஐ.ஆர். : 7/2019
பதிவு செய்யப்பட்ட நாள் : 4.11.2019
குற்றம் நிகழ்ந்த காலம் : 4.11.2019
புகார் கொடுத்தது : எம்.சுரேஷ், திருச்சி.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : பி.கார்த்திக், உதவி பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை.
குற்றச்சாட்டுகள் : மானிய சலுகையில் டிராக்டர் வாங்குவதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், மானிய தொகையில் 10% (ரூ.22,500/-) இலஞ்சம் கேட்டது.
மாவட்டம் : காஞ்சிபுரம்
எஃப்.ஐ.ஆர். : 1/2021
பதிவு செய்யப்பட்ட நாள் : 11.01.2021
குற்றம் நிகழ்ந்த காலம் : 05.01.2021
புகார் கொடுத்தது : ஆர்.எம். ஆனந்தன்.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : சுகுமார், துணை இயக்குநர் (வேளாண்மை), செங்கல்பட்டு.
குற்றச்சாட்டுகள் : வீட்டுமனையாக மாற்றுவதற்கு தடையின்மை சான்று வழங்குவதற்கு ரூ30,000 இலஞ்சம் கேட்டது.
மாவட்டம் : ராணிப்பேட்டை
எஃப்.ஐ.ஆர். : 3/2024
பதிவு செய்யப்பட்ட நாள் : 08.07.2024
குற்றம் நிகழ்ந்த காலம் : 06.07.2024
புகார் கொடுத்தது : வி.பூமா, துணை ஆய்வுக்குழு அலுவலர். (இருதுறை கூட்டு சோதனை)
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : வி.தபேந்திரன், வேளாண் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), மற்றும் உதவியாளர் இளவரசன்.
குற்றச்சாட்டுகள் : புஞ்சை நிலங்களை விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்காக, குடியிருப்பு மனைப்பிரிவுகளாக மாற்ற கள ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்க இலஞ்சம் வாங்கியது. திடீர் சோதனையில், கணக்கில் வராத 1,26,000/- கைப்பற்றப்பட்டது.
4. விவசாயிகளை சுற்றுலா அழைத்து சென்றதாக மோசடி :
மாவட்டம் : திருவண்ணாமலை
எஃப்.ஐ.ஆர். : 15/2019
பதிவு செய்யப்பட்ட நாள் : 22.08.2019
குற்றம் நிகழ்ந்த காலம் : 22.08.2019
புகார் கொடுத்தது : ரஜனிகாந்த், இன்ஸ்பெக்டர், ஊழல் தடுப்பு பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : அமல் சேவிய பிரகாஷ், உதவி இயக்குநர் தோட்டக்கலை.
குற்றச்சாட்டுகள் : சுற்றுவட்டார காய்கறி தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் சுற்றுலா அழைத்து சென்றதாக போலியாக கணக்கு காட்டி ரூ. 2,75,000/- மோசடி செய்தது.
மாவட்டம் : வேலூர்
எஃப்.ஐ.ஆர். : 12/2020
பதிவு செய்யப்பட்ட நாள் : 3.11.2020
குற்றம் நிகழ்ந்த காலம் : 27.10.2014 – 15.11.2014
புகார் கொடுத்தது : விஜயலெட்சுமி, இன்ஸ்பெக்டர், ஊழல் தடுப்பு பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : சிந்தாமணி, உதவி இயக்குநர், தோட்டக்கலை.
குற்றச்சாட்டுகள் : காய்கறி தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் சுற்றுலா அழைத்து சென்றதாக போலியாக கணக்கு காட்டி ரூ.3,85,500/- மோசடி செய்தது.
மாவட்டம் : திருவண்ணாமலை
எஃப்.ஐ.ஆர். : 3/2021
பதிவு செய்யப்பட்ட நாள் : 21.05.2021
குற்றம் நிகழ்ந்த காலம் : 06.11.2014 – 11.02.2015
புகார் கொடுத்தது : ஜி.மைதிலி, இன்ஸ்பெக்டர், ஊழல் தடுப்பு பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : பி.அன்பரசு, தோட்டக்கலை அலுவலர்.
குற்றச்சாட்டுகள் : CDP திட்டத்தின் கீழ், விவசாய உற்பத்தியைப் பெருக்குவது தொடர்பாக விவசாயிகளை சுற்றுலா அழைத்துச் சென்றதாக போலியாக கணக்கு காட்டி மோசடி செய்தது. மதிப்பு 3 இலட்சம்.
5. அதிரடி ஆய்வு நடத்தி கணக்கில் வராத பணம் கைப்பற்றபட்ட விவகாரம் :
மாவட்டம் : சென்னை, ஊழல் தடுப்பு தலைமையகம்.
எஃப்.ஐ.ஆர். : 8/2018
பதிவு செய்யப்பட்ட நாள் : 24.07.2018
குற்றம் நிகழ்ந்த காலம் : 23.07.2028 – 24.07.2018
புகார் கொடுத்தது : சரளா, மாவட்ட துணைக்குழு அலுவலர் / வட்டாட்சியர். (இருதுறை கூட்டு ஆய்வு)
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : சங்கர், துணை இயக்குநர், வேளாண்துறை (உரம்).
குற்றச்சாட்டுகள் : தமிழகத்தின் 31 மாவட்டங்களிலுள்ள வேளாண் உதவி இயக்குநர்கள் (உரக்கட்டுப்பாடு) பங்கேற்ற கூட்டம். நபர் ஒருவருக்கு 3000 வீதம் வசூலித்த தொகை தஞ்சை மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் வித்யாவிடமிருந்து பறிமுதல். கேரளா ஜூஜூபி ஜோசப் கேரளாவில் நடத்திவரும் High Range Fertilisers நிறுவனத்தின் கிளை கம்பத்தில் உள்ளது என்றும்; நீம் கேக் தயார் செய்து மொத்த வியாபார விநியோகம் செய்ய உரிமம் பெறுவதற்காக கையில் 25,000 உடன் காத்திருந்திருக்கிறார். தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் டெபுடி மேனேஜர் மார்க்கெட்டிங் டி.சந்திரசேகரன், மாதாந்திர உர விநியோகத் திட்டத்தின் கீழ் சப்ளை செய்வது தொடர்பாக சந்திக்க வந்திருக்கிறார். திருவண்ணாமலையிலிருந்து, குருணை உரம் தயாரிக்கும் Greentech Fertilizer Corporation நிறுவனத்தின் இயக்குநர் வினோத் மூலப்பொருட்கள் வாங்குவது தொடர்பான ஒப்புதல் வாங்குவதற்காக ரூ.2,50,000 பணத்துடன் வந்திருக்கிறார். ஆக மொத்தம், கணக்கில் வராத தொகை ரூ. 3,97,500.00 மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
மாவட்டம் : திருநெல்வேலி
எஃப்.ஐ.ஆர். : 10/2019
பதிவு செய்யப்பட்ட நாள் : 02.07.2019
குற்றம் நிகழ்ந்த காலம் : 31.10.2018
புகார் கொடுத்தது : ராஜூ, மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர்,
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : என்.ஜோதிபாசு, வேளாண் உதவி இயக்குநர், (தரக்கட்டுப்பாடு).
குற்றச்சாட்டுகள் : உரம் மற்றும் விற்பணை கடைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்களில் தணிக்கை செய்து மாமூல் வாங்குவதாக புகார். அதிரடி ஆய்வில் ரூ 25 , 510/- கைப்பற்றப்பட்டிருக்கிறது.
மாவட்டம் : நீலகிரி.
எஃப்.ஐ.ஆர். : 10/19
பதிவு செய்யப்பட்ட நாள் : 25.10.2019
குற்றம் நிகழ்ந்த காலம் : 24.10.2019
புகார் கொடுத்தது : பிரகாஷ், மாவட்ட ஆய்வுக்குழு தலைவர் (பொ), இருதுறை கூட்டு திடீர் ஆய்வு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : ராஜன், கண்காணிப்பாளர், வேளாண் பொறியியல் துறை, கே.சுப்ரமணியன், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு).
குற்றச்சாட்டுகள் : மரம் வெட்டவும், வீடு கட்டவும் தடையின்மை சான்று பெற இலஞ்சம். உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பணை செய்யும் கடை உரிமையாளர்களிடம் கடையின் உரிமத்தை புதுப்பிக்க இலஞ்சம். ஆய்வில் கணக்கில் வராத, ரூ.67,803.00 கைப்பற்றப்பட்டது.
மாவட்டம் : அரியலூர்
எஃப்.ஐ.ஆர். : 5/2020
பதிவு செய்யப்பட்ட நாள் : 12.11.2020
குற்றம் நிகழ்ந்த காலம் : 11.11.2020
புகார் கொடுத்தது : ந.கனகமாணிக்கம், துணை ஆய்வுக்குழு அலுவலர். (திடீர் சோதனை)
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : பி.அன்புராசன், இயக்குநர் தோட்டக்கலைத்துறை, பாரதிதாசன், கண்காணிப்பாளர், வேளாண்துறை உள்ளிட்டு 4 பேர்.
குற்றச்சாட்டுகள் : அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் கணக்கில் வராத ரூ. 1,05.500/- ரொக்கம், மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம்.
மாவட்டம் : திருவாரூர்
எஃப்.ஐ.ஆர். : 12/2021
பதிவு செய்யப்பட்ட நாள் : 11.12.2021
குற்றம் நிகழ்ந்த காலம் : 10.12.2021
புகார் கொடுத்தது : ராமச்சந்திரன், மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர்.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : த.பாலசுப்பிரமணியன், வேளாண் உதவி இயக்குநர், மாறன், துணை வேளாண் அலுவலர் உள்ளிட்டு 14 பேர்.
குற்றச்சாட்டுகள் : விவசாயிகளுக்கு மானியத்தில் விதை, உளுந்து மற்றும் விதைநெல் வழங்குவதில் முறைகேடு. அதிரடி ஆய்வில், கணக்கில் வராத ரூ.23,14,650.00/- கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதிகாரிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
எஃப்.ஐ.ஆர். : 15/2023
பதிவு செய்யப்பட்ட நாள் : 10.11.2023
குற்றம் நிகழ்ந்த காலம் : 10.11.2023
புகார் கொடுத்தது : ப.பிரேம்குமார், மண்டல துணை வட்டாட்சியர். திடீர் ஆய்வு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : ரா.சுரேஷ்பாபு, செயலாளர், வேளாண் விற்பணைக்குழு
குற்றச்சாட்டுகள் : விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் தானிய விளை பொருட்களை வியாபாரிகளிடம் ஏலமுறையில் விற்பணை செய்யும்போது நேரடியாகவும் இடைத்தரகர் மூலமாகவும் இலஞ்சம் வாங்கியது. சுரேஷ்பாபு வீட்டு படுக்கையறையில் இருந்து, கணக்கில் வராத ரூ.8,80,000/- மற்றும் ஆவணங்கள் பறிமுதல்.
6. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் :
மாவட்டம் : நீலகிரி
எஃப்.ஐ.ஆர். : 5/19
பதிவு செய்யப்பட்ட நாள் : 30.04.2019
குற்றம் நிகழ்ந்த காலம் : 1.03.2008 – 28.02.2018
புகார் கொடுத்தது : தட்சிணாமூர்த்தி, டி.எஸ்.பி., ஊழல் தடுப்புப்பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : ஆர்.செல்வம், (முன்னாள்) உதவி இயக்குநர், வேளாண்துறை (தரக்கட்டுப்பாடு), மற்றும் திருமதி இலட்சுமி.
குற்றச்சாட்டுகள் : 113.30% வருமானத்துக்கு அதிகமாக (தோராயமாக, 78 இலட்சம்) சொத்து சேர்த்ததாக வழக்கு.
மாவட்டம் : புதுக்கோட்டை
எஃப்.ஐ.ஆர். : 7/2019
பதிவு செய்யப்பட்ட நாள் : 9.05.19
குற்றம் நிகழ்ந்த காலம் : 01.01.2012 – 31.12.2017
புகார் கொடுத்தது : சார்லஸ் நெப்போலியன் ராஜ், இன்ஸ்பெக்டர், ஊழல் தடுப்புப் பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : திருமதி எஸ்.குருமணி உதவி இயக்குநர், தோட்டக்கலை மற்றும் அவரது கணவர் முத்துவீரப்பன்.
குற்றச்சாட்டுகள் : 39.36% வருமானத்துக்கு அதிகமாக, (ரூ. 50,80,956.00) சொத்து சேர்த்த வழக்கு.
மாவட்டம் : ராமநாதபுரம்
எஃப்.ஐ.ஆர். : 3/2021
பதிவு செய்யப்பட்ட நாள் : 10.05.2021
குற்றம் நிகழ்ந்த காலம் : 01.01.2011 – 31.10.2020
புகார் கொடுத்தது : எஸ்.உன்னிக்கிருஷ்ணன், டி.எஸ்.பி. ஊழல் தடுப்புப்பிரிவு.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : எஸ்.மனோகரன், (முன்னாள் நீர்வளத்துறை ) செயற் பொறியாளர், வேளாண்துறை, மதுரை.
குற்றச்சாட்டுகள் : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது. மதிப்பு சுமார் ரூ. 4,46,53,148.94
7. பிற வழக்குகள் :
மாவட்டம் : திருவண்ணாமலை
எஃப்.ஐ.ஆர். : 4/2017
பதிவு செய்யப்பட்ட நாள் : 10.05.17
குற்றம் நிகழ்ந்த காலம் : 18.03.2017
புகார் கொடுத்தது : க.கனகராஜ், விவசாயி.
குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்கள் : குமார், உதவி வேளாண் அலுவலர்.
குற்றச்சாட்டுகள் : பதிவு இல்லை.
— அங்குசம் புலனாய்வுக்குழு.
ஊழல் தொடா்பாக வெளியான முந்தைய செய்தியை படிக்க
தமிழக வேளாண்துறையும் வேரூன்றிய ஊழலும் ! விரிவான ரிப்போர்ட் !