ஆளுங்கட்சியிடமே லட்டு கேட்ட அதிகாரி.!
ஆளுங்கட்சியிடமே லட்டு கேட்ட அதிகாரி.!
நெற்களஞ்சிய மாவட்டத்தில் திருமண பரிகார ஸ்தலம் அமைந்துள்ள ஊரில், இரண்டெழுத்து பெயரைக்கொண்டவர் காவல்துறை உயரதிகாரியாக இருந்து வருகிறார்.
இவரை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அதிகாரியாக கொண்டுவர மேலிடத்தில் ரெக்கமண்ட் செய்தது லோக்கல் ஆளுங்கட்சியை சேர்ந்த மூன்று எழுத்து புள்ளி ஒருவர் தானாம். காரணம், ஏற்கனவே நிலைய பொறுப்பு அதிகாரியாக அந்த சரோண்டிங்கில் பணியாற்றியபோதே அந்த ஆளுங்கட்சி புள்ளி நல்ல நட்பாம்.
இந்த நிலையில் தான் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தனக்கு வேண்டப்பட்ட கட்சிக்காரரின் சிவில் வழக்கை சுமுகமாக முடித்துவிட சொல்லி அந்த மூன்றெழுத்து அரசியல் புள்ளி கூறியுள்ளார்.
அதன்மூலம் உயரதிகாரியை பார்க்க சென்ற கட்சிக்காரரிடம் இதை முடித்து கொடுத்தால் தனக்கு எவ்வளவு லட்டு கொடுப்பீர்கள் என்று பேரம் பேசியுள்ளாராம் அந்த அதிகாரி. இந்த செய்தியை தன்னை அனுப்பிய ஆளுங்கட்சி புள்ளியிடம் போய் சொல்ல சம்பந்தப்பட்ட உயரதிகாரிக்கு போன் போட்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாராம் ஆளுங்கட்சி புள்ளி.
-அங்குசம் ஸ்பை