போக்சோ, கஞ்சா வழக்கில் கைதான குற்றவாளிகள் குண்டாசில் கைது !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரத் பெட்ரோல் பங்கின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ராம்ஜிநகர், காந்தி நகரைச் சேர்ந்த குணா 29/25 த.பெ தணிக்காசலம் என்பவரை கடந்த 20.06.2025-ம் தேதி கைது செய்து திருவரம்பூர் . 159/25 U/s 8(c) r/w 20(b)(ii) (B) of NDPS Act -ன் படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 24/25, U/s 5(m), 5(n), 5(1), 5(j)(ii) r/w 6(1) of POCSO Act & 351(2) BNS -பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புத்தனாம்பட்டி, பொன்விழா நகரைச்சேர்ந்த சிவக்குமார் 39/25 த.பெ துரைசாமி என்பவரை கடந்த 03.07.2025-ம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி கஞ்சா மற்றும் பாலியல் வழக்குகளில் ஈடுபட்ட சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான குணா மற்றும் சிவக்குமார் ஆகியோர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு 13.07.2025-ஆம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 62 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.