இயற்கையாய் வாழும் பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள் ! பறவைகள் தொடர் 13
இயற்கையாய் வாழும் மரகதப்புறா போன்ற பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள். உங்கள் பறவை காதலை வெளிப்படுத்த வேண்டுமெனில் பறவைகளுக்கு உணவளியுங்கள். வீட்டின் வெளியே உணவை வைத்து காத்திருங்கள். முதலில் காகம் மட்டுமே வரும் அதற்காக எரிச்சலுராமல் தொடர்ந்து உணவளித்தால் புறா,சிட்டுக் குருவி என ஒவ்வொன்றாக வரும். உங்கள் இல்லமும் பறவைகளின் மகிழ்ச்சி சப்தங்களால் நிறைந்திருக்கும்.
வானத்துப் பறவ விதைப்பதும் இல்ல, மழைவரும் முன்னே அறுப்பதும் இல்ல,
பசிப் பிணி கொண்டு படுப்பதும் இல்ல,
இல்லை இல்லை என்று இறப்பதும் இல்ல,
பறவைகள் எல்லாம் அழுவதும் இல்ல, அழுகையில்லாத மனிதனும் இல்ல…
ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் வரும் பாடல் வரிகள் இவை..
பறவைகளும் மற்ற உயிரினங்களும் பல வருடங்கள் கழித்து இந்த உலகம் நமக்காகவும் படைக்கப்பட்டது என உணர்ந்து கொள்ள, ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது காலம்.
மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழவே முடியாது. எப்படி என யோசியுங்கள். காரணத்தைப் பிறகு சொல்கிறேன்.
ஆற்றல் பிரவீன்குமார்
தொடரும்