மக்கள் சிந்திக்க….. பாஜக செய்யும் மதவாத அரசியல்
மதவாத அரசியல் என்பது மதத்தை அரசியலில் பயன்படுத்தி சமூகத்தில் மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
மதவாத அரசியல் என்பது மக்கள் மனத்தில் மத உணர்வுகளை தூண்டி, அதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் ஒரு முறை. இது குறிப்பாக தேர்தல்களில் மத அடிப்படையில் வாக்குகளை கேட்டு, மக்களை பிரித்து, அதன் மூலம் வெற்றி பெற்றிடலாம் என்ற ஒரு தீய எண்ணத்தோடு இந்தியாவிலே எல்லா இடங்களிலும் அரசியலிலே பாஜக செய்யும் சூழ்ச்சி.
இதன் ஆபத்துகளை பாஜக ஆட்சியில் இந்தியாவிலேயே பல்வேறு இடங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மத அடிப்படையில் மக்கள் இடையே விரிசல் ஏற்படுத்தி “நாம் – அவர்கள்” என்ற எண்ணம் வேரூன்றி, ஒரே தேசத்தினுள்ளே பகைமையை உருவாக்கி வருகிறார்கள்.
இது நீடித்தால் மத அடிப்படையில் வன்முறைகள் ஏற்படுத்தி பெரும்பாலும் மத கலவரங்களுக்கு வழிவகுக்கும். இது மக்கள் உயிரையும் ஒற்றுமையும் இழக்கும் நிலையை உருவாக்கும்.
பாஜக அரசியல் தலைவர்களின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் மூலம் உண்மையான வேலைகளில் கவனம் செலுத்தாமல், மதத்தை வெறும் வாக்குப்பதிவுக்கான கருவியாக பயன்படுத்துகிறார்கள்.
மதம் என்பது தனி மனிதனின் நம்பிக்கையாக இருக்க வேண்டும், அரசியலுக்குள் அதனை இழுக்கக் கூடாது.
அரசியல் என்பது நலன்களை சார்ந்ததாக இருக்க வேண்டும்: வேலைவாய்ப்பு, கல்வி,விவசாயம், சுகாதாரம், சமத்துவம்,சமூக நீதி, எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திடவும், பொருளாதாரம் உயர்த்திட போன்றவற்றில்தான் கவனம் செலுத்த வேண்டும். இதைத்தான் உண்மையான ஜனநாயக இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு செய்து கொண்டிருக்கிறது.
பிஜேபியின் மதவாத அரசியல் ஒரு தேசத்தின் ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். ஒருவரது மத நம்பிக்கையை மதிப்பது அரசியலின் கடமை, ஆனால் அதனை ஆட்சி பெறுவதற்காக பாகுபாடாய் பயன்படுத்துவது என்பது நாகரிகத்துக்கு எதிரானது என்பதை மறவாதீர்.