“ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” புத்தக வெளியீட்டு விழா
திருச்சிராப்பள்ளி புனித வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் பார்பியர் அரங்கம் (Barbier Hall) கல்லுரியின் ஆங்கிலத் துறை சார்பாக நடைபெற்றது.
முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய “ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் (Sociopolitical Movements of a Century in Tamil Nadu – மொழியாக்கம்: முனைவர் R. குர்ஷித் பேகம்) வெளியீட்டு விழா நடைபெற்றது.
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நூலை வெளியிட்டார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவா்கள் நூலைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் ஏற்புரை முனைவர் சுப. வீரபாண்டியன், தலைவர், சமூக நீதி கண்காணிப்புக் குழு, இந்நிகழ்வில் அருட்திரு டாக்டர் பவுல்ராஜ் மைக்கேல் எஸ்.ஜே ரெக்டர் செயிண்ட் ஜோசப் கல்லூரி (தன்னாட்சி) அருட்திரு .டாக்டர் எஸ். மரியதாஸ் எஸ்.ஜே முதல்வர் செயிண்ட் ஜோசப் கல்லூரி (தன்னாட்சி) .
புத்தக மதிப்புரை அருட் திரு. டாக்டர் எம். ஆரோக்கியசாமி சேவியர் எஸ்.ஜே செயலாளர் செயிண்ட் ஜோசப் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு அன்பழகன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சேர்மன் மு மதிவாணன் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.