அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கிடேரி கன்றுகளின் வெங்கை நோய் கட்டுப்படுத்தும் கன்றுவீச்சு நோய் தடுப்பூசி

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தேசிய வெக்கை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் கன்றுவீச்சு நோய் தடுப்பூசி (NADCP- Brucellosis Vaccination) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று சுற்றுகள் கன்றுவீச்சு நோய் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அதன் தொடர்சியாக தற்சமயம் 18.09.2024முதல் 15.10.2024முடியதொடர்ந்து 27 நாட்களுக்கு 4வது சுற்று கன்றுவீச்சு நோய் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.  இத்தடுப்பூசிப் 4மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

 

இத்தடுப்பூசிப் பணியின்போது 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகள் கண்டறியப்பட்டு, அவைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, காதுவில்லைகள் பொருத்தப்பட்டு, இத்தடுப்பூசிப் பணிமேற்கொள்ளப்படும்.  தடுப்பூசிப் போடப்படும் கிராமங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலமாக முன்னறிவிப்பு செய்யப்பட்டு இப்பணி மேற்கொள்ளப்படும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கிடேரி கன்று வைத்துள்ள விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு தங்களது கன்றுகளுக்கு ஏற்படும் கன்றுவீச்சு நோய் தடுப்பூசிப் (Brucellosis Vaccination) போட்டுக் கொள்ள அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகிடுமாறும், கன்றுகளுக்கு தடுப்பூசிப் போட்டுக் கொண்டு பயனடையுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவா்  திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவா்கள் தொிவித்துள்ளார்.

 

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

செய்தி வெளியீடு

உதவி இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.