அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

செக் மோசடி : உஷாரா இருந்துக்கோங்க !

திருச்சியில் அடகு நகையை விற்க

காசோலை கொடுத்தவர் தேதியிட்டு வழங்குகிறார். காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் அதை காசோலை பெற்றவர் வங்கி கணக்கில் போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும்.
காசோலை பெற்றவர் அதனை வங்கியில் போடுகிறார். வங்கியில் காசோலை கொடுத்தவர் அக்கவுண்டில் பணம் இல்லை என்று அந்த காசோலை திருப்பித் தரப்பட்டு, வங்கியில் இருந்து அதற்கான மெமோ காசோலை பெற்றவரிடம் வழங்கப்படுகிறது.
‪சட்ட‬ ‪அறிவிப்பு‬ ‪வழங்க‬ ‪வேண்டும் :

காசோலை வழங்கியவர் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும்பட்சத்தில், அந்த மெமொ பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு ஒரு சட்டப்படியான அறிவிப்பை காசோலையை பெற்றவர் வழங்க வேண்டும். இந்த அறிவிப்பு வழங்குவது மிக கட்டாயமானதாகும்.
‪என்ன‬ ‪செய்ய‬ வேண்டும் ?
காசோலையை கொடுத்தவருக்கு முறைப்படி சட்ட அறிவிப்பை காசோலையை பெற்றவர் அனுப்புகிறார். அறிவிப்பு வழங்கிய பின்னர் காசோலை கொடுத்தவர் அறிவிப்பை பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பணத்தை திருப்பி அளிக்கவேண்டும்.15 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், காசோலை கொடுத்தவர் பணம் தரவில்லை. காசோலை வழங்கியவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பான 15 நாட்கள் முடிந்ததும், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கை காசோலை பெற்றவர் தாக்கல் செய்யலாம். இந்த கால அளவில் ஏதாவது தவறு ஏற்பட்டால், காசோலை மோசடி வழக்கு தொடர முடியாது.
என்ன ‪செய்யக்‬கூடாது‬ ?
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தேதியில் வழங்கப்பட்ட காசோலையை வங்கியில் பணம் வசூலிக்க காசோலை பெற்றவர் தாக்கல் செய்கின்றார். காசோலை கொடுத்தவர் கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர் காசோலையை பெற்றவரிடம் தெரியப்படுத்துகின்றார். காசோலை கொடுத்தவரை, காசோலை பெற்றவர் தொடர்பு கொண்டால், சற்று பொறுத்துகொள்ளுங்கள், இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுவேன் என்கின்றார். அவர் பேச்சை கேட்டு காசோலை பெற்றவர் சட்டப்படியான நோட்டிஸ் 30 நாட்களுக்குள் அனுப்பாமல் இருக்கிறார். ஒரு மாதம் கழிகின்றது. பணம் தரவில்லை. பணத்தை கேட்டால், காசோலை கொடுத்தவர் பணம் கொடுக்க மறுக்கின்றார். 30 நாட்களுக்குள் சட்டப்படியான அறிவிப்பு அனுப்பவில்லை என்பதால் இப்போது திரும்பி வந்த காசோலையை வைத்து வழக்கிட முடியாது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

P.M.சுந்தரமூர்த்தி
P.M.சுந்தரமூர்த்தி

இப்போது, என்ன செய்யவேண்டும் ?
காசோலையை தாக்கல் செய்வதற்கான கால அளவு குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம் வரை இருப்பதால், திரும்பவும் ஒரு முறை அந்த காசோலையை பெற்றவர் வங்கியில் தாக்கல் செய்ய வேண்டும். அது திரும்பி வந்த பிறகு, உடனடியாக காசோலையை கொடுத்தவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்ப வேண்டும்.
அனுப்புகின்ற அந்த சட்ட அறிவிப்பில் முதலாவதாக பணம் வசூலிக்க காசோலை வங்கியில் போட்ட விபரத்தையும், காசோலை திரும்பி வந்த விபரத்தையும், காசோலையை கொடுத்தவர் பணத்தை ஒரு மாதத்துக்குள் தருவதாகக் கூறியதால் சட்டப்படியான அறிவிப்பு வழங்காமல் இருந்ததையும் தெளிவாக அதில் குறிப்பிடவேண்டும்.
பணத்தை வசூலிக்க குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம் எத்தனை முறை வேண்டுமானாலும் வங்கியில் அந்தக் காசோலையை தாக்கல் செய்யலாம். காசோலை திரும்பி வந்ததும் சட்ட அறிவிப்பு வழங்கலாம். ஆனால், கடைசி 15 நாட்கள் இருக்கும்போது தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்தால், காசோலையை வழங்கியவர் சொல்லும் கதைகளை (பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்) கேட்காமல் சட்ட அறிவிப்பு வழங்குவது நல்லது.
அல்லது காசோலை வழங்கியவர் மீது நம்பிக்கை இருக்கும்பட்சத்தில், புதிதாக ஒரு காசோலையை அவரிடம் பெற்ற பிறகே, அவர் நமக்கு பணத்தை கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.
காசோலை ‪அளித்தவர்‬ ‪இறந்து விட்டால்‬?
வாடிக்கையாளருக்கும், வங்கிக்கும் உள்ள உறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாகும். வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அதன் பின்னர் வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை கழிக்க முடியாது. வாடிக்கையாளர் இறந்துவிட்டார் என்று வங்கி காசோலையை திருப்பி அனுப்பினாலும், அதன் அடிப்படையில் காசோலை மோசடி வழக்கிட முடியாது ஏனெனில் சட்டப்படியான அறிவிப்பை காசோலை வழங்கியவருக்கு மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும், இறந்தவர் மீது குற்றவியல் வழக்கு தொடர முடியாது. ஆனால், காசோலை கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் மீது சிவில் வழக்கு போடலாம். இறந்தவர் ஏதாவது சொத்தை விட்டு சென்றால் அந்த சொத்தின் மீது நீதிமன்றத்தின் வாயிலாக உரிமை கோரலாம். இறந்தவருக்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் இறந்தவர் கடனை அடைக்க அவரின் வாரிசுதாரர்கள் கடமைபட்டவர்கள் அல்ல. வாரிசுதாரர்களின் கடமையானது இறந்தவரின் சொத்தில் அடையும் உரிமை அளவே ஆகும்.

Admission Enquiry Form

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்,
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம்,
திருப்பத்தூர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.