அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வரலாற்று சிறப்புமிக்க சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில்-ஆன்மீக பயணம்-13

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

நடராஜர் கோவில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது  இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள மிக சிறப்பு பெற்ற கோவிலாகும். இக்கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோவில் மிக நீண்ட புராண தொடர்பு உடையது. கோயிலின் கட்டிடக்கலை கலைக்கும், ஆன்மீகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பை பிரதிபலிக்கிறது.

சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய சிதம்பரத்தில் பத்தாம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது. சோழர்கள் தங்கள் குலதெய்வம் ஆக சிதம்பரம் நடராஜரை கருதினர். இந்த நடராஜர் கோவில் 2 மில்லினியம் முழுவதும் சேதம், சீரமைப்பு மற்றும் விரிவாக்கம் அடைந்துள்ளது. சிவன் கோவிலின் முக்கிய தெய்வமாக இருந்தாலும் வைஷ்ணவியும் விக்திசம் மற்றும் மற்றவர்களிடமிருந்து வரும் முக்கிய கருப்பொருட்களையும் இது பிரதிபலிக்கிறது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

listing gallery itemசிதம்பரம் கோவில் வளாகம் தென்னிந்தியாவில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஐந்து முக்கிய ஹால் அல்லது சபாக்கள் உள்ளன. அவை கனக சபா, சித்த சபா, நிருட்டா சபா, தேவ சபா மற்றும் ராஜ சபா. சிவனின் மிக முக்கியமான வடிவங்களில் ஒன்றாகும் நடராஜர் வடிவம். இந்த இடம் கலாச்சார வரலாற்று பார்வையிலும் வரலாற்று முன்னோடிகளிலும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

இப்போது, மேற்கு நாட்டு விஞ்ஞானிகளும் நடராஜரின் பெருவிரலை உலகின் காந்த மின்புலத்தின் மையமாக கொண்டுள்ளது என்று நிரூபித்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆசிரியர்களின் சில தகவல்கள்:- ( முன்னோர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான பொற்கோவில்களுக்கு பின் இருக்கும் அற்புதங்கள் பல அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைதான்)  இந்த கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின் காந்த புலத்தின் மைய மையத்தில் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதியில் உள்ளது என்று கூறப்படுகிறது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

HARINI JEWELLERS TRICHY

சிதம்பரம் நடராஜர் கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என இந்து சமய அறநிலையத் துறை குழு ஜூன் 7, 8-ல் ஆய்வு | Chidambaram Natarajar Temple ...பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம் காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி ஆலயம் நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 டிகிரி 49 மை நோட் ஈஸ்ட் தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. நாம் வானத்தின் மேலிருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும். இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் உச்சகட்ட அதிசயம். மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலில் 9 நுழைவு வாயில்களும் மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கிறது.

விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்க தகடுகளைக் கொண்டு வேயப்பட்டது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை (நரம்புகள்) குறிக்கின்றது. இதில், கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

திருமந்திரத்தில் திருமூலர் மனிதன் வடிவில் சிவலிங்கம் அதுவே சிதம்பரம் அதுவே சதாசிவம் அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிக்கின்றது. சிவபெருமானின் உருவத்தை பிரதிபலிக்கிறாரோ என்று திருமூலர் கூறுகிறார். சிதம்பரத்தை பிரதிபலிக்கும் சதாசிவம் பிரதிஷ்டை இது. பொன்னம்பலம் சற்று இடது புறமாக சாய்ந்து அமைக்கப்பட்டுள்ளது. இது நமது உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும் இந்த படிகளை பஞ்சாட்சர படி என்றே அழைக்கப்படுகிறது.

listing gallery itemஅதாவது சி- வா – ய – ந – ம என்ற ஐந்து எழுத்து. அது கனகசபை பிற கோவில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் இருக்கின்றது. இந்த கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களை குறிக்கின்றது. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகடங்களையும் சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64+64 மேற்பலகைகளை கொண்டுள்ளது. இது 64 கலைகளை குறிக்கின்றது. பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள் 9 வகையான சக்திகளை குறிக்கின்றது. அர்த்தமண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கின்றது. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் காஸ்மிக் டான்ஸ் என்ற பெயரில் பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மேலும், ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகியவை வருடாந்திர திருவிழாக்கள் மற்றும் பாரம்பரிய கொண்டாட்டங்களும் கொண்டாடப்படும். இவ்வாலயம் தினந்தோறும் காலை 6:00 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

—   பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.