தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடு !
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசிய ராகேஷ் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் 11.10. 2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ் சிவா, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில தலைவர் க. இப்ராஹிம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் எம். செல்வகுமார், வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில செயலாளர்களில் ஒருவரான ஜி ராமராஜ், ஏ ஐ டி யு சி திருச்சி மாவட்ட தலைவர் வே.நடராஜா, மாதர் சங்கத்தின் மாநகர் மாவட்டச் செயலாளர் அ.அஞ்சுகம் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட குழு உறுப்பினர்கள் A.சண்முகம், M.சுமதி, மருதாம்பால், ரஷ்யா பேகம், L.நல்லுசாமி, S.கருணாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் பெருமன்ற மேற்கு பகுதி செயலாளர் K.தர்மராஜன் பொருளாளர் p.சசிவரணம், மாதர் சங்கத்தின் சார்பில் G.ஈஸ்வரி போக்குவரத்து அன்பழகன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.