அரசின் அடையாள அட்டைகளை ஒப்படைத்த பட்டியல் இன பெண்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

செஞ்சி அருகே ஜம்போதி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதி குறுகிய நிலப்பரப்பில் மக்கள் அடர்த்தியாக வசிப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அரசின் அடையாள அட்டைகள் ஒப்படைப்பு.!
அரசின் அடையாள அட்டைகள் ஒப்படைப்பு.!

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மேற்படி ஊரில் உள்ள 8 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மீட்டு குடிமனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியிடம் பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம்,செஞ்சி தனி வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரின் அலட்சியப் போக்கால்  இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும்  குடிமனை பட்டா வழங்காததால் இன்று 24.03.2025  மாவட்ட ஆட்சியரிடம்  நூற்றுக்கணக்கான பெண்களுடன் எங்கள் தலைமையில் அரசின் அடையாள அட்டைகளான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு,  வாக்காளர் அட்டை உள்ளிட்டவர்களை ஒப்படைத்து கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

உடனே சமாதான பேச்சு வார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் உடனடியாக குடிமனை பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார். உடன் செஞ்சி ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணன் துத்திப் பட்டு கோவிந்தன்,  விக்கிரவாண்டி ஒன்றிய துணை செயலாளர் வேலியந்தல் ஜெயக்குமார் மற்றும் ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

தோழர் நா.பிரசாந்த் BA.,LLB.,

முற்போக்கு மாணவர் கழகம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.