பெரியார் குறித்து கேவலமாக எழுதியவருக்கு வீடு வழங்கி கெளரவப்படுத்திய தி.மு.க. அரசு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குறி விறைப்பிழந்த நரைத்த தாடி வளர்த்த கிழவர்கள், பெண்குறியில் தாடியை நீவி சுக்கிலம் வெளியேற்றும் கலையைக் கற்றுக் கொண்டார்கள். அப்படி குமரிப் பெண்களின் குறிகளில் தாடியை நீவி சுக்கிலம் வெளியேற்றும் கிழவர்களை வெண்தாடி வேந்தர்கள் என்று அழைத்தார்கள்..

குறியில் தாடி உரசிப் புணரும் காமக் களியாட்டத்தில் மக்கள் லயித்து அவர்கள் பின் சென்றார்கள். சாஸ்திரங்கள் அனைத்தையும் சம்பிரதாயங்களாக மாற்றினார்கள். ஊருக்கு மட்டுமே உபதேசம் உனக்கல்ல என்பது தாரக மந்திரமாயிற்று.”

Sri Kumaran Mini HAll Trichy

பெரியார் குறித்து இப்படி கேவலமாக எழுதிய ஒருவருக்கு தி.மு.க. அரசு வீடு வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது வருத்தத்திற்குரியது.

“வெளவால் தேசம்” என்னும் தனது நாவலில் இவ்வாறு எழுதியிருப்பவர் சோ.தர்மன்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வெளவால் தேசம்
வெளவால் தேசம்

ஒன்றிய அரசின் சாகித்ய அகாதமி பெறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கனவு இல்லம் பரிசு வழங்கும் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

எஸ்.எஸ்.ஆரின் வலதுசாரி அரசியலை ஏற்றுக் கொண்டவர் என்பதாலேயே சோ.தர்மனுக்கு சாகித்ய அகாதமி பரிசு வழங்கப்பட்டது என்று பரவலாகப் பேசப்பட்ட பரிசுத்தகுதி  பெரியார் பற்றி இழிவாக எழுதியிருந்தாலும் சாகித்ய அகாதமி விருதாளர் என்பதால் சோ.தர்மனுக்கு கனவு இல்லம் வழங்கி கெளரவப்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

சாகித்ய அகாதமி வாங்கியவருக்கு மாநில அரசு வீடு என்பதே தவறான முடிவு.  இதன்படி இந்த அரசின் கொள்கைகளுக்கு நேரெதிரானவர்களுக்கே இந்த வீடு போய்ச்சேரும்

இந்த அரசின் சமூகநீதிக் கருத்துகளுக்காகப் பேசும் மனுஷ்ய புத்திரனுக்குக் கிடைக்காத வீடு மாலனுக்குக் கிடைக்கும்.

பெரியாரின் கொள்கைகளுக்காக வாதாடிக் கொண்டிருக்கும் சுகுணா திவாகருக்கும், திருமாவேலனுக்கும் கிடைக்காத வீடு ஜோடி குரூசுக்கும், சோ.தர்மனுக்கும் கிடைக்கும். விளிம்புநிலை மனிதர்களை எழுதும் சுகிர்தராணிக்குக் கிடைக்காத வீடு ஒற்றைப் புத்தகத்தை எழுதி விட்டு லாபி செய்து விருது வாங்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குக் கிடைக்கும்.

Flats in Trichy for Sale

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, சாகித்ய அகாதமி விருது பெற்றவருக்கு வீடு என்னும் அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.

வீடோ, விருதோ ஒன்றிய அரசை வழிமொழியாமல் அதற்குரியவர்களை  தனது கொள்கை முடிவுப்படி தமிழ்நாடு அரசே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அரசின் சாகித்ய அகாதமி விருது

அரசின் சாகித்ய அகாதமி விருது

தமிழ் அறிஞர், எழுத்தாளர்களில் யாருக்கு எதைத் தரவேண்டும் என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார்..

பிரபஞ்சன் போன்ற வீடற்ற ஆனால் கொள்கையில் தெளிவோடிருந்தவர்களுக்கு அரசு வீடுகளை ஒதுக்கினார்.‌.

அவர் ஒதுக்கிய வீடுகள் வசதியில்லாத எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்களுக்கே வழங்கப்பட்டன.

சனாதனவாதிகளின் செல்லப்பிள்ளைகளுக்கும், பெரும் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் விருது என்னும் ஒற்றைத்தகுதியின் பெயரால் வீடு வழங்காமல் வீடற்ற அறிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் வழங்குவதே இந்த ஆட்சிக்குப் பெருமை சேர்க்கும்.

 

—        திரைப்பட இயக்குநர் – கவிதாபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.