விருதுநகர்- பாட்டியை கொலை செய்த பேரன் – மது போதையில் வெறிச்செயல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் அருகே,  செட்டியார்பட்டி நாயுடு தெற்கு தெருவை சேர்ந்த நவநீதன் என்பவரது மனைவி சரஸ்வதி(75) வசித்து வருகிறார்.

திங்கட்கிழமை மாலையில் சரஸ்வதி வீட்டின் முன்பு அதே தெருவை சேர்ந்த தனது மகன் பாலசுப்பிரமணி என்பவரது மகன் ஸ்ரீதர்(22) என்பவர் அடிக்கடி குடி போதையில் வந்து பாட்டி சரஸ்வதி உடன் தகராறு செய்து வந்தாராம். சரஸ்வதி பலமுறை அவரை கண்டித்தும் திருந்தாமல் தொடர்ந்து குடித்து வந்தார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

பாட்டியை கொலை செய்த பேரன்
பாட்டியை கொலை செய்த பேரன்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்நிலையில்  ஸ்ரீதர் சரஸ்வதியுடன்  குடிபோதையில் வாக்குவாதம் செய்தார் . என்னை யாரும் கண்டிக்க கூடாது என சரஸ்வதி தலையில் கல்லை தூக்கி போட்டு ஓடிவிட்டார்.  ரத்த வெள்ளத்தில் மிதந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த  தளவாய்புரம் காவல் நிலைய போலீஸார் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமுறைவாக இருந்த ஸ்ரீதரை கைது செய்து விசாித்து  வருகின்றனர்.

 

—   மாரீஸ்வரன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.