பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பொதுவழிக்கு போலி ஆவணம் தயாரித்ததாகவும்  அதை ஆக்கிரமித்து   அருகில் உள்ள வீட்டிற்கு வழி விடாமல் செய்து வரும்  அதிமுக பிரமுகரின் அடாவடியை  தட்டி கேட்ட சமூக ஆர்வலருக்கு  தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ,  திமுக எம்எல்ஏ தலையீட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும்  சமூக ஆர்வலர் ஒருவர், திருப்பத்தூர் மாவட்ட  ஆட்சியருக்கும் , காவல்துறை கண்காணிப்பாளருக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளது  பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஆர்வலர் சண்முகம்
சமூக ஆர்வலர் சண்முகம்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

திருப்பத்தூர் மாவட்டம்,  குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சண்முகம். குரிசிலாப்பட்டு கிராம பஞ்சாயத்து வார்டு மெம்பராகவும்  இருந்துக்கொண்டு அப்பகுதியில் நடக்கும்  அநீதிகளை ஆதாரத்தோடு அம்பலப்படுத்துவதும் ,  ஏழை எளிய மக்களுக்கு  ஆலோசனைகளும்  வழங்கி வருகிறார்.

இந்த நிலையில்,  அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பாஸ்கரன் என்பவர், பொதுப்பாதையை ஆக்கிரமித்து குடிசை போட்டிருக்கிறார். பொதுவழியை மறித்து குடிசை போட்டதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 1  கி.மீ. தூரத்திற்கு வீதியை சுற்றி வர வேண்டிய இன்னலை எதிர்கொள்கிறார்கள். பலரும் பிரச்சினை என்று ஒதுங்கிவிட்ட நிலையில், அதே பகுதியில் வசிக்கும் திமுக பிரமுகரான மணிகண்டன் குடும்பத்தினர் தொடர்ந்து இந்த அநியாயத்தை எதிர்த்து வந்திருக்கிறார்கள். பொது நல நோக்கில் இவர்களுக்கு ஆதரவாக, சமூக ஆர்வலர் சண்முகம் செயல்படுவதை கண்டு ஆத்திரம் கொண்ட அதிமுக பிரமுகர் பாஸ்கரன் தொடர்ந்து சண்முகத்திற்கு மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பாஸ்கரன்
பாஸ்கரன்

”ரோட்டு வழி ஆக்கிரமிப்பை  தட்டிக்கேட்கப்போன  எனக்கு இந்த நிலையா?” என்று ஆதங்கத்தோடு பேசுகிறார், சமூக ஆர்வலர் சண்முகம்.

” அதிமுக பிரமுகர்களான   முனிசாமி மற்றும் அவரது மகன் பாஸ்கரன் ஆகியோர் பொது வழியை போலி பத்திரத்தின் வாயிலாக ஆக்கிரமித்து  குடிசையை கட்டிக்கொண்டு அநீதி இழைத்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிட கூடாது விலகி கொள்ள வேண்டும் என்று பலமுறை கொலை மிரட்டல் விடுத்தனர்.

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

கடந்த ஜனவரி 18 தேதி அன்று மாலை குரிசிலாபட்டு காவல்நிலையத்திற்கு முன்பாகவே பாஸ்கர் என்னை தாக்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் சண்டையை விலக்கிவிட்டார். இதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டிலும் இதேபோல தாக்குதல் முயற்சி நடந்து போலீசில் புகார் ஆகியிருக்கிறது. அதிமுக மாஜி மந்திரி வீரமணி மற்றும் திமுக எம்எல்ஏ தேவராஜ் ஆகியோர்  உறவினர்கள் என்று பேசுவதால், போலீசாரும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். நான் நியாயத்திற்காக போராடுகிறேன்.

பொதுப்பாதை ஆக்கிரமிப்புஎனது 40 ஆண்டுகால நண்பர் ஒருவர் அரசு இடத்தை ஆக்ரமித்து வீடு கட்டியதை எதிர்த்து போராடி அந்த இடத்தை அரசுக்கு மீட்டு கொடுத்தேன். கடந்த ஆண்டு உங்கள் “அங்குசம் பத்திரிகை” துணையுடன் இந்த ஊரு பஞ்சாயத்து தலைவி ஒருவர் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு இடத்தை ரியல் எஸ்டேட் அதிபருக்கு தாரை வார்த்து கொடுத்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து மீட்டுள்ளேன். அதுபோலத்தான், மணிகண்டன் விவகாரத்திலும் செயல்பட்டு வருகிறேன்.” என்கிறார்.

புகார் குறித்து அதிமுக பிரமுகர் பாஸ்கரனிடம் பேசினோம்.  ”  அந்த இடம் அவருக்கு சொந்தமானது இல்லைங்க.  அது சம்பந்தமாக 47 ஆண்டுகளாக வழக்கு  நிலுவையில் உள்ளது. அது எங்கள் பிரச்சினைங்க. இவரு  ஏன் தலையிட வேண்டும்? போலீஸ் ஸ்டேஷனில் காவலர்கள் முன்னிலையிலே  தாக்கினேன் என்பது பொய் . சிசிடிவி கேமராவில் பதிவு ஆகி இருக்கும் அதை வைத்து என் மீது  நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம்” என அழைப்பை துண்டித்தார்.

மணிகண்டன்
மணிகண்டன்

பாதிக்கப்பட்ட மணிகண்டனிடம் பேசினோம், “பிரச்சினைக்குரிய வழிபாதையுடன் கூடிய எங்கள் பட்டா இடத்தையும் ஆக்கிரமித்து குடிசைகளை  கட்டிக்கொள்ள போலீஸ் துணை நின்றது. எங்களுக்கு உதவியா இருக்கும் சண்முகம் ஐயாவையும் மிரட்டுகிறார்கள். பத்தடியில் செல்லும் பாதைக்கு ஒரு கிலோமீட்டர் வரை  சுற்றி வருகிறோம். அவர் சொல்வது போல் கோர்ட்டில்  வழக்கு எதுவுமில்லைங்க.   பச்சை பொய் பேசுகிறார்.” என்கிறார்.

புகார்  குறித்து குரிசிலாப்பட்டு  பொறுப்பு காவல் ஆய்வாளர் அலெக்ஸிடம் கேட்டபோது, “பாஸ்கரன் என்ற நபர் சமூக ஆர்வலரை காவல்நிலையத்திலே தாக்க முற்பட்டதை  அறிந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தேன். மற்றபடி யார் தலையீடும் இல்லை” என்றார் .

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

”தமிழ்நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ” என்கிறார், சிவசேனா கட்சியை சேர்ந்த சரவணன்.

பொது வழி ஆக்ரமிப்பால் ஒரு குடும்பமே அழிவு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்கும் சமூக ஆர்வலரை காவல் நிலையத்திற்கு முன்பாகவே தாக்க முயற்சித்த சம்பவமும் பதற்றத்தை கூட்டியிருக்கிறது.

 

— மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.