கள ஆய்வு அனுபவங்களும் சிக்கல்களும் !
(18.02.2026) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது..
நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முது முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீமான் இளையராஜா அனைவரையும் வரவேற்றார்.
நாட்டுப்புறவியல் துறையின் தலைவர் பேராசிரியர் இரா.காமராசு கருத்தரங்கின் நோக்கம் குறித்து நோக்கவுரை நிகழ்த்தினார்.
இக்கருத்தரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் செல்ல_பாலு அவர்கள் “பாமர மக்களின் நாட்டுப்புற உணர்வுகள்” எனும் தலைப்பிலும், முனைவர் மு_ஏழுமலை அவர்கள் “தெருக்கூத்துக் கலையும் கள ஆய்வு அனுபவங்களும்” எனும் தலைப்பிலும்,
முனைவர் பே_சக்திவேல் அவர்கள் “கள ஆய்வு அனுபவங்களும் சிக்கல்களும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். நிறைவாக முனைவர் மாலதி நன்றி கூறினார்.
இந்நிகழ்வினை முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழரசன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில்… பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..








Comments are closed, but trackbacks and pingbacks are open.