மனித நேயமிக்க மகத்தான பணி !
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரத்தநாட்டில் வசிக்கும் தமிழ்செல்வன் (43) என்பவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் தமாம் நகரில் கம்பெனி டிரைவராக வேலைக்கு சேர்ந்து உள்ளார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். சவுதி அரேபியாவில் IWF இந்தியன் வெல்பர் ஃபார்ம் இந்திய நல்வாழ்வு மையம் சேர்ந்த தஜ்மல் தீன், பீர்முகமது இந்த இருவரையும் ஒரத்தநாட்டில் குடும்பத்தினர் தொடர்பு கொண்டார்கள்.

உடனே இருவரும் ஆஸ்பத்திரியில் உரிய ஆவணங்கள் காண்பித்து சவுதி அரேபியாவில் உடலை பெற்று திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி கிழக்கு தமுமுக – மமக மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்களின் பரிந்துரையில், திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக நிர்வாகிகள் உடலை பெற்றுக்கொண்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ரம்ஜான் அலி, பூக்கொல்லை மு.சையது முஸ்தபா விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம், லால்குடி நகரம் அப்துல் சுக்குர் அக்பர் அலி, சமஸ்பிரான் நிசார், சாகுல் ஆகியோர் பங்கு பெற்றனர்.