அவன்தான் மனிதன் … மத்தது எல்லாம் சைக்கோ !
ராமராஜன் விவாகரத்து விஷயமாக கோர்ட்டுக்கு வந்த பொழுது, ஒரு நிருபர் நளினி பற்றியும் உங்கள் திருமண வாழ்க்கை பற்றியும் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு ராமராஜன், ”நளினி என் மனைவி. என் மனைவியை பற்றி நானே உங்களிடம் சொல்வது நாகரிகமாக இருக்காது” என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று விட்டார். விவாகரத்து தீர்ப்பான அன்றும் . அதே நிருபர் ராமராஜனை வழிமறித்து இப்போதாவது பதில் சொல்லுங்கள் என்று அதே கேள்வியை திரும்பவும் கேட்டார். ”விவகாரத்தான பிறகு, அவர் யாரோ? நான் யாரோ? எங்களுக்கிடையே எந்த உறவும் இல்லை. இன்னொருவர் வீட்டு பெண்ணை பற்றி நான் பேசுவது நாகரீகமாக இருக்காது” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.

கேரியர் உச்சத்தில் இருக்கட்டும். ஆயிரம் கோடி சம்பாதிக்கட்டும். அதெல்லாம் சாதனையே இல்லை. இந்தக் காலத்தில் கள்ள லாட்டரி விக்கிறவன், சாராயம் காய்ச்சுறவன் கூட ஆயிரம் கோடி வச்சிருக்கான். சக மனிதனை விடுங்க குறைந்தபட்சம் தன் குடும்பத்தை எவன் கண்ணியமாக மதிக்கறானோ? அவன்தான் மனிதன். மத்தது எல்லாம் சைக்கோ!
— விநாயகா முருகன்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.