பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ”இடைக்குழு  மாநாடு”

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெரம்பலூர் 27 /4 /2025 ஆம் தேதி  இடைக்குழு  மாநாடு தீரன் நகரில் ஜீவா அரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. சா. காப்பியன் தலைமை தாங்கினார் மூத்த தலைவர் தோழர் வேணுகோபால் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடைக்குழு மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடைக்குழு மாநாடு

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் தோழர் வீ. ஞானசேகரன் மாவட்ட செயலாளர் தோழர் வி. ஜெயராமன் அரசியல் விளக்க உரை ஆற்றினார்கள் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் அ. ராஜேந்திரன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.தனராசு துணைத் தலைவர் கே அழகேசன் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க   மாவட்ட செயலாளர் ஆர். சங்கர் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் பாளைச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Apply for Admission

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

11 பேர் கொண்ட இடைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இடைக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக தோழர் அ. கல்யாணி துணை செயலாளராக தோழர் சா. காப்பியன். பொருளாளராக தோழர் மேகசந்திரன் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரம்பலூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும், பெரம்பலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்  என்ற தீர்மானங்கள் உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.