பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூர் வட்டம் அகரப்பேட்டை பிர்காவிற்கான 1431ஆம் ஆண்டு பசலி  கிராம கணக்குகள் ஒப்படைப்பு ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட துணை ஆட்சியா்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சீர்மரபினா் நல அலுவலர் ஸ்ரீதா் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார்.

ஜமாபந்திஇந்த ஜமாபந்தியில் பூதலூர் வட்டாட்சியர், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார், மண்டல துணை வட்டாட்சியா்,  உதவி வட்டாட்சியர் , அகரப்பேட்டை வருவாய் ஆய்வாளர்,  திருக்காட்டுப்பள்ளி வருவாய் ஆய்வாளர், செங்கிப்பட்டி வருவாய் ஆய்வாளர், பூதலூா் வருவாய் ஆய்வாளர் மற்றும், உதவி வட்ட வழங்கல் அலுவலர், தாலுகா தலைமை நில அளவையாளர்  உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

Apply for Admission

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

14 கிராமங்களை கொண்ட அகரப்பேட்டை பிர்காவை சேர்ந்த பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, வீடு வேண்டுதல், ஓய்வூதியம், பட்டா மாறுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடா்பான மனுக்கள் அளித்தனா். இதனை தொடர்ந்து, மே-15 அன்று திருக்காட்டுப்பள்ளி பிர்கா; மே-16 பூதலூர் பிர்கா; மே-17 செங்கிப்பட்டி பிர்காவுக்கான  ஜமாபந்தி நடைபெறவிருக்கிறது.

 

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

—   தஞ்சை க.நடராஜன்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.