மக்களவையில் எதிரொலித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம் !
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மெண்ட் தீர்மான கடிதத்தை, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக பொருளாளர் டி. ஆர். பாலு எம்.பி, இந்தியா கூட்டணி எம்.பிக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள நில அளவை தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
— மணிபாரதி







Comments are closed, but trackbacks and pingbacks are open.