ஆயிரம் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தி போர் செய்ய தயார் – கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு
சிவகாசி தனியார் மண்டபத்தில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவிற்கு 1600 இளைஞர்கள் ரத்த தானம் வழங்கும் முகாம், அன்னதானம் வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு, தங்கத்தேர் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி:

பஹல்காம் என்கிற அற்புதமான சுற்றுலா தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது நாட்டில் உள்ள அப்பாவிகளை அநியாயமாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய அரசு நேற்று நள்ளிரவு நடைபெற்ற தாக்குதலை நாடே வரவேற்கிறது அதனை நானும் வரவேற்கிறேன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அது மட்டுமல்ல பிரதமர் நரேந்திர மோடி எடுக்கின்ற நடவடிக்கைக்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளது.
அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக எனது தலைமையில் ஆயிரம் இளைஞர்களை தயார் செய்து யுத்தகளத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி சண்டையிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
— மாரீஸ்வரன்.