கலைமாமணி விருது பெற்ற நெல்லை மண்ணின் கிராமத்துக்குயில் !
நாட்டுப்புற பாடலுக்காக தமிழக அரசின் மிக உயரிய விருதான கலைமாமணி விருது நெல்லை மண்ணின் கிராமத்துக்குயில் முனைவர் ஆ. சந்திரபுஷ்பம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. சிறுவயது முதலே கிராமியப் பாடல்களை பாடிவரும் இவர் வானொலியிலும் கிராமத்துக் குயிலாக வலம் வந்தார்.
நாட்டுப்புற பாடல்களை ஆராய்ச்சி செய்து அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். எல்லா மேடைகளிலும் இவரது பாடல் ஒலிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக விழிப்புணர்வுப் பாடல்களை இவரே இயற்றி மெட்டமைத்துப் பாடி வருகிறார். கிராமத்துகுயில் என்ற இவரது வலைத்தள பக்கத்திலும் இவரது பாடல்கள்.
இவரது கலைக்காக தமிழக அரசு கலைமாமணி விருது அளித்திருப்பது மேலும் இக்கலையை வளர்க்க உறுதுணையாக அமையும் என்கிறார். இறைவன் என் பெற்றோர் தமிழக அரசு தமிழக முதல்வர் அமைச்சர்கள் இயல் இசை நாடக மன்ற தலைவர் உறுப்பினர் செயலர் தேர்வுக்குழுவினர் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றி.







Comments are closed, but trackbacks and pingbacks are open.