அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரகக் கல் அகற்றும் இயந்திரம் வழங்கிய சிட்டி யூனியன் வங்கி !

0

அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரகக் கல் அகற்றும் இயந்திரம் வழங்கிய சிட்டி யூனியன் வங்கி !

சிட்டி யூனியன் வங்கியின் சார்பாக 106 ஆண்டு பழமை வாய்ந்த கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் திரு.இருதய ஆண்டவர் பொது மருத்துவமனைக்கு வழங்கிய அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரகக் கல் அகற்றும் இயந்திரம் தொடக்க விழா.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

கும்பகோணத்தில் 106 ஆண்டு பழமை வாய்ந்த திரு. இருதய ஆண்டவர் பொது மருத்துவமனை கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சிட்டி யூனியன் வங்கியின் சார்பாக ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள அறுவை சிகிச்சை இன்றி சிறுநீரக கல் அகற்றும் இயந்திரம் வழங்கப்பட்டது அதன் தொடக்க விழாவும் மற்றும் இலச மருத்துவ முகாமின் தொடக்க விழாவும் நடைபெற்றது.

மருத்துவமனையின் இயக்குனர் அருள்தந்தை டி தேவதாஸ் தலைமை ஏற்க மருத்துவமனையின் நிர்வாகி அருள் சகோதரி ஆலிஸ் பிரான்சிஸ் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக சிட்டி யூனியன் வங்கியின் முதுநிலை பொது மேலாளர் எஸ் மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த மருத்துவமனையில் பணி செய்யும் அனைத்து மருத்துவர்களையும் அறிமுகப்படுத்தும் விழாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரி தியாகராஜன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.