ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் பிடிபட்ட கஞ்சா !
திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் திரு ஆதர்ஷ் பச்சேரா அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு சக்கரவர்த்தி அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு குற்றத் தடுப்பு சம்பந்தமாக திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சாம் ஆலன் முதல் நிலை காவலர் திரு கண்ணதாசன் காவலர் ராஜ்குமார், ரகு மற்றும் திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் ஆகியோர் 19.04.2026 ஆம் தேதி அதிகாலை 2:30 மணி அளவில் திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் வண்டி எண். 22605 புருளியா to திருநெல்வேலி செல்லும் விரைவு வண்டியில் பின்னால் உள்ள பொதுப் பெட்டி மற்றும் நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 3 சோல்டர் பேக்கை சோதனை செய்த போது சுமார் 2 கிலோ கொண்ட 8 பாக்கெட்டுகள் மொத்தம் 16.645 கிலோகிராம் (மதிப்பு சுமார் 8 லட்சம்) அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு அது முறையாக மீட்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு திருச்சி அவர்களிடம் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
****
இன்று 19.4.2026 காலை 5 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் .. T. No. 12653, coach no. A2, seat no. 17, 18 சென்னை to திருச்சி வரை பயணம் செய்து வந்த நபர் தங்களது இருக்கையில் தவறவிட்ட ஹேண்ட் பேக்கை C sec அலுவலில் இருந்த crime police Hc 1124 Tr. ராஜலிங்கம் மற்றும் pc 95 Tr. சந்தானம் ஆகியோர் வண்டியை பரிசோதனை செய்தபோது கிடைக்கப்பெற்றதை நிலையம் கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது பேக்கில் Red necklose -1( 80 கிராம்), செயின் வித் பெண்டன் 70 கிராம்ஸ், கிரீன்செட் (செயின் -1,ஸ்டெட்ஸ் 1 pair, pendant -1) பேர்,பங்கிள்ஸ் – 1 set, 3 சில்வர் காயின்ஸ், 3 கேஸ் கவர்ஸ் Rupees 200 each and atm card, and Id card ஆகியவை இருந்தன…
அதனை உரிய நபரான திரு தேவராஜ் 62/26 s/o ஸ்ரீமத், 74 c, 32 மெயின் ரோடு அண்ணாமலை நகர் திருச்சி என்பவரிடம் நல்ல முறையில் திருச்சி ரயில்வே போலீசார் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.









Comments are closed, but trackbacks and pingbacks are open.