10அம்ச கோரிக்கையை நிறைவேற்ற நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் !
10அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது …
களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திடுக தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்கிடுக, துணை ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை கலைந்திடுக, ஒப்பந்த முறையில் நில அளவர் நியமனத்தைதை கைவிடுக உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையம் 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் முன்பு ராஜ்குமார் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு அவர் தலைமையில் 48 மணிநேர வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு அதன் மாநில செயலாளர் முத்து முனியாண்டி உட்பட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்டம் அனைத்து நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்