அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நாள்தோறும் வகைவகையான பிரசாதம் :  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பிரசாத பட்டியல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நாள்தோறும் வகைவகையான பிரசாதம் :  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பிரசாத பட்டியல் !

அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்த காட்சி
அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்த காட்சி

தமிழகத்தில் உள்ள 5 புகழ்பெற்ற கோயில்களில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள் முதலானவை நாள்தோறும் வழங்கப்படும்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இத்திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த டிசம்பர் 31-ம் தேதி காணொளிக் காட்சி மூலம் திருவண்ணாமலை கோயிலுக்கும் விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார். இதையடுத்து, திருவண்ணாமலை கோயிலில்  நடைபெற்ற  பிரசாதாம் வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி  தொடங்கி வைத்தார் .


பிரசாத பட்டியல்:

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

பௌர்ணமி நாட்கள்:       லட்டுகள் ( 1.25 இலட்சம் முதல் 1.50 இலட்சம் பக்தர்களுக்கு)

ஞாயிற்றுக் கிழமை:         லட்டுகள்  (60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு)

திங்கட்கிழமை:                    லட்டுகள்  (25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு)  

செவ்வாய்க்கிழமை:        எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் (25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு)

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

புதன்கிழமை:                        கேசரி  (25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு)

வியாழக்கிழமை:               லட்டுகள்  (25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு)

வெள்ளிக்கிழமை:             கேசரி  (60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு)

சனிக்கிழமை:                      லட்டுகள் ( 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்களுக்கு)  


 

பிரசாதமாக வழங்கப்படும் என திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரத்யேகமாக கோயில் வளாகத்தின் உள்ளேயே, அன்னதான கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணாமலையார் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக  நாள் முழுவதும் சுமார் 3000 பக்தர்களுக்கு அன்றாடம் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிவபக்தர் முருகன்
சிவபக்தர் முருகன்

”தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்து செல்லும் பக்தர்கள் பசி இன்றி அண்ணாமலையாரை  தரிசித்து செல்லும் காட்சி மகிழ்ச்சி அளிக்கிறது. இறைவனிடம் வரம் கேட்டு வரும் பக்தர்களை வெறுங்கையோடு அனுப்பாமல், மனம் நிறையும்படி பிரசாதம் வழங்கி வழியனுப்பி வைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி” என்கிறார் பக்தர் முருகன் நெகிழ்ச்சியோடு!

 மணிகண்டன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.