‘மெட்ராஸ்காரன்’-ல் எல்லாமே இருக்கு !
‘மெட்ராஸ்காரன்’-ல் எல்லாமே இருக்கு! – SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூலை 24 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில் பேசியவர்கள்… தயாரிப்பாளர் பி.ஜெகதீஸ்
“நம்ம மெட்ராஸின் அடையாளமே எல்லா ஊர்க்காரர்களும் இங்கு இருப்போம், வேலை பார்ப்போம். அதே போல் இந்த மெட்ராஸ்காரனில் எல்லாமே இருக்கிறது. எந்த ஒரு தயாரிப்பாளரும் முழு கதை கேட்டுத் தான் ஒகே செய்வார்கள், ஆனால் நான் பாதி கதை கேட்ட போதே, படத்தை ஆரம்பிக்க சொல்லிவிட்டேன்.

இயக்குநர் மீது இருந்த நம்பிக்கை தான் காரணம். படம் பார்த்து விட்டேன் திருப்தியாக இருக்கிறது. ஷேன் அவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்துள்ளார். அவருக்குத் தமிழில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. கலை பிரதர் மிக உரிமையாகப் பழகுவார். மெட்ராஸ் அன்பு பாத்திரத்திற்குப் பிறகு, இந்தப்படத்தில் துரை சிங்கமாகக் கலக்குவார். நிஹாரிகா மிக அழகாக, அற்புதமாக நடித்துள்ளார். நான் தயாரிப்பாளராக இருக்க ஐஸ்வர்யாவும் ஒரு காரணம். அவர் கதாபாத்திரம் நன்றாக வந்துள்ளது.
சாம் சிஎஸ் ஒரு மியூசிக் டாக்டர். படத்தை எப்படிக் கொடுத்தாலும் சரியாக்கி விடுவார். கேமராமேனும் நானும் எப்போதும் சாப்பாடு பற்றித் தான் பேசுவோம் அவ்வளவு நெருக்கம். எடிட்டர் சின்னப் பையன் தான் ஆனால் கலக்கிவிட்டார். படம் மிக அருமையாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி”.
இயக்குநர் வாலி மோகன் தாஸ்
“எனது தயாரிப்பாளர் மற்றும் முதலாளி ஜெகதீஸ், இந்தப்படம் ஆரம்பமாக, காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாகக் கூட கேட்காமல் தயாரித்தார்.
இந்தப்படம் பற்றி அனைவரும் சொல்லிவிட்டனர். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்”. ஹீரோ ஷேன் நிகம் அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி.
என் மீதே, எனக்கே சந்தேகம் இருந்தபோது, வாலியும், ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளனர். என் பட டீசரை வெளியிட்ட நடிகர் எஸ் டி ஆருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.

நடிகை நிஹாரிகா
“நல்ல திறமையாளர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளனர், இந்த வாய்ப்பைத் தந்த வாலிக்கு, என் நன்றிகள்”.
நடிகர் கலையரசன்
“எனக்கு ஊர் மெட்ராஸ் தான்.ஆனால் இந்தப்படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன். வாலியின் முதல் படத்தின் மேக்கிங் பிடித்திருந்தது, படத்தின் கதையும் பிடித்தது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் கதையை நம்பி நல்ல படத்தை எடுத்துள்ளார்”.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.”ஒரு படத்தை நன்றாக எடுக்கும் போது, எல்லோருடைய பங்களிப்பும் மிக நன்றாக வந்து விடும். இப்படம் மிகத் தரமான படைப்பாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இளன் பாடல் மிக நன்றாக எழுதியுள்ளார். கல்யாணம் பற்றி மிக அருமையான பாடலாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சி, வாலி உடன் பணியாற்றியது மகிழ்ச்சி”.
இயக்குநர் இளன்
“இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என் ஃப்ரண்ட்ஸ். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இதில் ஒரு பாடல் எழுதியுள்ளேன்.இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்”.
நடிகை ஐஸ்வர்யா தத்தா..
“தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம், பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் ஜெகதீஸ் என்னோட ஃபிரண்ட், ஃபெண்டாஸ்டிக் ஹியூமன் பீயிங் மேன். வாலி பற்றிச் சொன்னேன். பிடிச்ச டைரக்டர், பிடிச்ச புரொடியூசர். ஒரு நல்ல படம். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்”.

மலையாளத்தில் புகழ்பெற்ற ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர் டி எக்ஸ்’, ‘இஷ்க்’ படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர்.
‘ரங்கோலி’ படத்தை இயக்கிய வாலி மோகன் தாஸ், உருவாக்கியுள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார்.
SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார். சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.