மது அருந்துவதில் தகராறு ! குத்தி கொலை செய்த நண்பா்கள்!
மதுரை தத்தனேரி கணேஷபுரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் செல்வம் இதற்கு திருமணமாகி 2மகன்கள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த இவர் தத்தனேரி மயானத்தில் நண்பருடன் தினமும் மது அருந்துவது வழக்கம். வழக்கம் போல் நேற்று இரவும் மயானத்திற்கு அருகே நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் திடீரென ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட நிலையில் செல்வத்தை கத்தியால் கழுத்தில் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்த அக்கும்பல் தப்பி ஓடியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பந்தமாக தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மதுரையில் மதுபோதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.