அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்குஅருந்தொண்டாற்றிவரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

முதுமைக் காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்கா வண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என நான்காயிரம் ரூபாய்  உதவித் தொகையாக வழங்கப் பெறுகிறது.  தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்து வரும் பெருமக்களுக்கு இந்த உதவித் தொகைஅவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.  தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்குஅரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்ததகைமைக்காக உதவித் தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு,அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படிரூ.500/- எனஅத்திருத்தொண்டு தொடர்கிறது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தமிழாய்ந்த தமிழ் மகனின் தமிழரசு தமிழ்த் தொண்டர்களைக் காக்கும் இப்பணியில் இதுகாறும் 1334 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள்  பயனடைந்துள்ளனர்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்  பெருமக்களிடமிருந்து 2024-2025ஆம்  ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

‘மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பிக்கத் தகுதிகள்:

1) 01.01.2024 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

2) ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். (வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்).

3) தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு .

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

4) தமிழ்ப்பணி ஆற்றிவருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

5) ஆதார் அட்டைநகல், குடும்பஅட்டைநகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் /மனைவி) இருப்பின் அவரதுஆதார் அட்டைநகல் இணைக்க வேண்டும்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணைத்  இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (றறற.வயஅடைஎயடயசஉhiவாரசயi.வn.பழஎ.in)கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு முன்னர்க் கூறியதுபோல், திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500/-ம் மருத்துவப்படி ரூ.500/-ம் அவருடைய வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும்  தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்  அலுவலகத்தில் 31.10.2024க்குள் அளிக்கப்பட வேண்டுமெனவும் நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தொிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

வெளியீடு:

உதவி இயக்குநர்,

செய்தி மக்கள் தொடாபு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.