அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா! – அமைச்சர் செல்லூர் ராஜு

0

திருச்சியில் அடகு நகையை விற்க

பொறுத்தது போதும் பொங்கி எழு என மனோகரா படத்தில் வரும் வசனம் போல நான் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்துள்ளேன். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி….

மதுரை மாநகராட்சி மாமன்றத்தின் 36 மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும், சிறப்பு விருந்தினராக மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், அதிமுக முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்கள். மாமன்ற கூட்டத்தில்,

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 7 வகையான 201 சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான உரிம கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளன.  உரிம கட்டணங்கள் 800 முதல் 40,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.  உரிம கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட உரிம கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை. பறவை, விலங்குகள் வளர்க்க 150 ரூபாயும், மாடு வளர்க்க 500 ரூபாயும், குதிரை வளர்க்க 750 ரூபாயும், ஆடு வளர்க்க 150 ரூபாயும், பன்றி வளர்க்க 500 ரூபாயும், நாய், பூனை வளர்க்க 750 ரூபாயும் உரிம கட்டணங்கள் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னால் அமைச்சருமான செல்லூர் ராஜு மாமன்ற கூட்டத்தில் பங்கேற்று திட்டப் பணிகள் குறித்து மேயரிடம் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தொடர்ந்து, செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்….

பொருத்தது போதும் பொங்கி ஏழு என மனோகரா படத்தில் வரும் வசனம் போல நான் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்துள்ளேன். கோயில் மாநகர் குப்பை நகராக வருகிறது என நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள் என் சட்டமன்ற தொகுதிக்குள் 22 வார்டுகள் உள்ளது. மாநகராட்சி பகுதிக்குள் சென்றால் இடுப்பு எலும்பு ஒடிந்து விடுகிறது, மீனாட்சிக்கு 6 மாதம் மட்டுமே ஆட்சி, மேயருக்கு 5 ஆண்டுகள் ஆட்சி புரிகிறார். அம்ரூத் திட்டத்தின் நிலை என்ன? குடிநீர் எப்போது வினியோகம் செய்யப்பட உள்ளது. வரி கட்டாதவர்களிடம் சாட்டையை சுழற்றி மேயர் வரிகளை வசூலிக்க வேண்டும் என்றார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் உயரத்தில் கட்டடம் கட்டியவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என்னை தெர்மாகூல் என ஓட்டுகிறார்கள், மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பரீட்சிய முறையில் தெர்மாகூல் விட்டு ஆய்வு செய்தோம். வைகையாற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி கேட்டுப் பெற வேண்டும். வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதால் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது என பேசினார்.

 

—     ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.