மன உளைச்சலில் இருப்பவர்கள் அழுவதற்கு ஒரு தனி இடம்?
அழுகை எனும் அருவியில் தினம் தினம் நானும் விழுந்தேனே என்ற வரிகளுக்கு ஏற்ப மன உளைச்சலில் இருப்பவர்கள் தயக்கமின்றி அழுது கொள்வதற்காக மும்பையில் Crying Club என்ற புதிய இடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் ஒருவருக்கு எவ்வளவு மன உளைச்சல்கள், கவலைகள், வருத்தம் வழிகள் என எதுவாக இருந்தாலும் அவர்கள் அழுதே அதனை போக்கிக்கொள்ள விரும்புபவர்கள் இங்குச் செல்லலாம் என தெரிவிக்கப்படுகின்றது. தங்களது கிரையிங் கிளப்பிற்கு வருவோருக்கு Tissue paper, தேநீர் , Hug ஆகியவை மூலம், ஆறுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தற்போது வரை இந்த கிளப்பிற்கான கட்டணம் மற்றும் மற்ற விவரங்கள் மற்றும் எதுவும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. அப்புறம் என்ன நம்ம ஊரிலும் இதுபோன்ற கிளப்புகள் ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்!
— மு.குபேரன்