தமிழக சட்டசபையில் கனிமொழி – நாடார் சங்கம் கோரிக்கை…
கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் பங்கு பெறும் வகையில், இந்தமுறை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்: நெல்லை–தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் கோரிக்கை.
நாடார் சமுதாய மக்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும், ஒவ்வொரு கிராமங்களிலும், ஒவ்வொரு நகரங்களிலும், ஒவ்வொரு மாநகராட்சிகளிலும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் பரவலாக வசித்து வருகின்றனர். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் சமுதாயமாக நாடார் சமுதாயம் திகழ்கிறது.
மேற்கண்ட மாவட்டங்களை மையமாகக் கொண்டு, சுமார் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காக தொடர்ந்து சிறப்பாக சேவை செய்து வருவதையும், அவர்களில் எங்களது சமுதாயத்தை சேர்த்த பலருக்கு தங்களது நல்லாட்சியில் அமைச்சர் பொறுப்புகள் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதை எங்கள் சமுதாயம் நன்றியுடனும் பெருமையுடனும் நினைவு கூறுகிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சரின் மகளான கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் பங்கு பெறும் வகையில், இந்தமுறை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று எங்கள் நெல்லை–தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
அவர் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், மகளிர் உரிமைகளுக்கும் மற்றும் பெண் பிள்ளைகளின் நலனுக்கும் ஒரு சிறந்த பாதுகாப்பான அரசியல் தலைவராக விளங்க வாய்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
— மணிபாரதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.